மஹா கும்பமேளாவில் புனித நீராடிய அமித்ஷா

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் கூடும் திரிவேணி சங்கமம் பகுதியில் கடந்த 13ம் தேதி மஹா கும்பமேளா துவங்கியது.

இது, அடுத்த மாதம் 26ம் தேதி நிறைவடைகிறது. இதையொட்டி, பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கானோர் இங்கு நீராடி வருகின்றனர்.

இதுவரை, 13.21 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள், மஹா கும்பமேளாவில் பங்கேற்று, புனித நீராடி வழிபட்டு உள்ளதாக உ.பி., அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, தன் குடும்பத்தினருடன் மஹா கும்பமேளாவில் பங்கேற்றார்.

இதைத் தொடர்ந்து, தீர்த்தராஜ் பிரயாக் பகுதியில் துறவியருடன் இணைந்து திரிவேணி சங்கமத்தில் அமித் ஷா புனித நீராடி வழிபட்டார். அதன்பின், அங்குள்ள படித்துறையில் அமர்ந்து பூஜை செய்தார். இதையடுத்து, தன் குடும்பத்தினருடன் துறவியரை சந்தித்து ஆசி பெற்றார்.

பிரயாக்ராஜ் வரும் முன், சமூக வலைதளத்தில் அமித் ஷா கூறுகையில், ‘மஹா கும்பமேளா என்பது சனாதான கலாசார தத்துவத்தின் தனித்துவ அடையாளமாக விளங்குகிறது. கும்பமேளா, நம் வாழ்வின் தத்துவ நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டது’ என, குறிப்பிட்டுள்ளார்.

மஹா கும்பமேளாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், யோகா குரு பாபா ராம்தேவ், பா.ஜ., மூத்த தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் நலன் குறித்து முதல்வர் ச ...

மக்கள் நலன் குறித்து முதல்வர் சிந்திப்பாரா ? அண்ணாமலை கேள்வி ''தனது கட்சியினரின் நலனை விட்டுவிட்டு, வாக்களித்த தமிழக மக்களின் ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்பட ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்த வேண்டும் – பெல்ஜியம் மன்னருடன் பிரதமர் மோடி பேச்சு வர்த்தகம், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து, பெல்ஜியம் ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இ ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை – அமித்ஷா '' இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை,'' என ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்ச ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்சங்கர் பதில் '' தமிழக மீனவர்கள் விவகாரத்தில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அண்ணாமலை நெகிழ்ச்சி ஏழு இஸ்லாமிய நாடுகள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அர ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அரசு கர்நாடகாவில், நம்ம யாத்ரி என்ற தனியார் டாக்ஸி சேவை ...

மருத்துவ செய்திகள்

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...