2029 -லும் மோடிதான் பிரதமர் அமித் ஷா நம்பிக்கை

சண்டிகர்: யூனியன் பிரதேசமான சண்டிகரில், 24 மணி நேரம் குடிநீர் வழங்கும் திட்டத்தை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று துவக்கி வைத்தார்.

மேலும், புதிய மூன்று கிரிமினல் சட்டங்கள் தொடர்பான மொபைல்போன் செயலிகளையும் அவர் அறிமுகம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

பிரிட்டிஷ் காலத்தில் இருந்த மூன்று கிரிமினல் சட்டங்களுக்கு மாற்றாக, புதிய சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இது, 21ம் நுாற்றாண்டில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய சீர்திருத்த நடவடிக்கையாக இருக்கும். தற்போதைய மற்றும் எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப, இந்த சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன.

கடந்த, 2014 முதல் 2-024 வரையிலான, 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மேற்கொண்ட சீர்திருத்த, வரலாற்று சிறப்புமிக்க திட்டங்கள், நடவடிக்கைகள், நம் நாட்டின் வளர்ச்சி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.

இதை அங்கீகரிக்கும் வகையிலேயே, மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க மக்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணியை தேர்வு செய்துள்ளனர்.

இது கூட்டணி அரசு, அதனால் நீண்ட காலம் இருக்காது என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

இந்த கூட்டணி அரசு, தன் முழு பதவிக் காலத்தை நிறைவு செய்யும். மேலும், 2029ல் நடக்கும் தேர்தலிலும் வெற்றி பெறுவோம். மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிதான் அமையும், மோடி தான் பிரதமராக வருவார்.

கடந்த தேர்தல்களைவிட சற்று அதிகமான இடங்களில் வென்றுள்ளதால், ஏதோ பெரிய வெற்றி பெற்றதாக காங்கிரஸ் நினைக்கிறது.

அடுத்த தேர்தலிலும், எதிர்க்கட்சி வரிசை தான், காங்கிரசுக்கு கிடைக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

முதல்வர் மருந்தகம் இல்ல… ‘ம ...

முதல்வர் மருந்தகம் இல்ல… ‘முதல்வர் மாவகம்’ ; அண்ணாமலை விமர்சனம் முதல்வர் மருந்தகங்களில் மாவு விற்கப்படும் நிலையில், இதற்குப் பேசாமல், ...

பேட்ச் வொர்க் செய்த கட்டடத்தை த ...

பேட்ச் வொர்க் செய்த கட்டடத்தை திறந்த முதல்வர்; அண்ணாமலை குற்றச்சாட்டு அவசர அவசரமாக பேட்ச் வொர்க் செய்த கட்டடத்தை முதல்வர் ...

விரத மாலை அணிந்தார் நயினார் நாக ...

விரத மாலை அணிந்தார் நயினார் நாகேந்திரன் மதுரையில் நாளை மறுநாள் நடக்கும் முருகன் மாநாடு சிறப்பாக ...

காவல்துறையினர் பதவி உயர்விலும ...

காவல்துறையினர் பதவி உயர்விலும் ஏமாற்று வித்தை: தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம் திமுகவின் ஏமாற்று வித்தை, காவல்துறையினர் பதவி உயர்விலும் தொடர்வதாக ...

குடும்பத்தில் மட்டுமே வளர்ச்ச ...

குடும்பத்தில் மட்டுமே வளர்ச்சி -பிரதமர் மோடி சொந்த குடும்பத்தில் மட்டும் வளர்ச்சியுள்ளதாக ஆர்ஜேடி - காங்கிரஸ் ...

ஜி7 நாட்டு தலைவர்களுக்கு பிரதமர ...

ஜி7 நாட்டு தலைவர்களுக்கு பிரதமர் மோடி வழங்கிய பரிசுப் பொருட்கள் ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, கனடா, பிரான்ஸ், ...

மருத்துவ செய்திகள்

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...