2029 -லும் மோடிதான் பிரதமர் அமித் ஷா நம்பிக்கை

சண்டிகர்: யூனியன் பிரதேசமான சண்டிகரில், 24 மணி நேரம் குடிநீர் வழங்கும் திட்டத்தை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று துவக்கி வைத்தார்.

மேலும், புதிய மூன்று கிரிமினல் சட்டங்கள் தொடர்பான மொபைல்போன் செயலிகளையும் அவர் அறிமுகம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

பிரிட்டிஷ் காலத்தில் இருந்த மூன்று கிரிமினல் சட்டங்களுக்கு மாற்றாக, புதிய சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இது, 21ம் நுாற்றாண்டில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய சீர்திருத்த நடவடிக்கையாக இருக்கும். தற்போதைய மற்றும் எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப, இந்த சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன.

கடந்த, 2014 முதல் 2-024 வரையிலான, 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மேற்கொண்ட சீர்திருத்த, வரலாற்று சிறப்புமிக்க திட்டங்கள், நடவடிக்கைகள், நம் நாட்டின் வளர்ச்சி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.

இதை அங்கீகரிக்கும் வகையிலேயே, மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க மக்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணியை தேர்வு செய்துள்ளனர்.

இது கூட்டணி அரசு, அதனால் நீண்ட காலம் இருக்காது என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

இந்த கூட்டணி அரசு, தன் முழு பதவிக் காலத்தை நிறைவு செய்யும். மேலும், 2029ல் நடக்கும் தேர்தலிலும் வெற்றி பெறுவோம். மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிதான் அமையும், மோடி தான் பிரதமராக வருவார்.

கடந்த தேர்தல்களைவிட சற்று அதிகமான இடங்களில் வென்றுள்ளதால், ஏதோ பெரிய வெற்றி பெற்றதாக காங்கிரஸ் நினைக்கிறது.

அடுத்த தேர்தலிலும், எதிர்க்கட்சி வரிசை தான், காங்கிரசுக்கு கிடைக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடு ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது -நிதின் கட்கரி '' அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட் ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட்டம் அமித் ஷா குற்றச்சாட்டு ஸ்ரீநகர்: ''காங்கிரஸ் கட்சியும், ராகுலும், ஜம்மு காஷ்மீரை மீண்டும் ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீ ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத்தொடர்ந்து, மத்திய நிதி பெருநிறுவனங்கள் ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியல ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியலால் பழங்குடியினருக்கு அச்சுறுத்தல் -மோடி  பேச்சு ஜாம்ஷெட்பூர்: ''ஜார்க்கண்டில் ஓட்டு வங்கி அரசியலுக்காக, வங்கதேசம் மற்றும் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரச ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரசு தீவிரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தில், ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற கன்றுக்கு பிரதமர் தீபஜோதி என பெயரிட்டு மகிழ்ச்சி பிரதமர் மோடியின் இல்லம், டில்லியில் எண் 7 லோக் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...