சீனா படைபலத்தால் எல்லையை மாற்ற முயற்சிக்கக்கூடாது;- ஜப்பான்

இந்தியா, சீனா இடையிலான டோக்லாம் எல்லை பிரச்சினையில் இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது.சிக்கிம், திபெத், பூடான் சந்திப்பு பகுதியான டோக்லாமில் புதிதாக சாலைஅமைக்க சீன ராணுவம் முயற்சி மேற்கொண்டது.

இந்தப்பகுதி இந்தியாவின் ‘கோழிக் கழுத்து’ என்றழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களை இணைக்கும்பகுதியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு சீனா சாலைஅமைத்தால் கோழிகழுத்து பகுதியை அணுகுவது மிக எளிதாகிவிடும்.

சீனாவின் வியூகத்தை உடைக்க டோக்லாமில் சீனராணுவம் சாலை அமைப்பதை இந்தியராணுவம் தடுத்து நிறுத்தியது. இதன் காரணமாக அங்கு 2 மாதங்களுக்கும் மேலாக பதற்றம் நீடிக்கிறது. சீன எல்லைக்குள் இந்திய ராணுவம் ஊடுருவியிருப்பதாக அந்தநாடு வாதிட்டுவருகிறது. ஆனால் சர்வதேச அரங்கில் சீனாவின் வாதம் அங்கீகரிக்கப் படவில்லை.

பெரும்பாலான மேற்கத்திய ஊடகங்கள் டோக்லாம் எல்லையில் சீனராணுவம் அத்துமீறி செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளன. மேலும் அமெரிக்க பாதுகாப்புத்துறை நிபுணர்கள், டோக்லாம் விவகாரத்தில் இந்தியா பொறுப்புள்ள வல்லரசு நாடாக செயல்படுவதாகவும் சீனா சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

அமெரிக்க கடற்படை போர்கல்லூரியின் மூத்த பேராசிரியரும் பாதுகாப்புத் துறை நிபுணருமான ஜேம்ஸ் ஆர். ஹோம்ஸ் அண்மையில் கூறியபோது, லோக்லாம் பிரச்சினை பெரிதாகவெடித்தால் இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்தார்.

எல்லை பிரச்சினை குறித்து அமெரிக்க வெளியுறவு செய்தித்தொடர்பாளர் ஹீத்தர் அண்மையில் கூறியபோது, இந்தியாவும் சீனாவும் நேரடி பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

இந்தப்பின்னணியில் இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் கென்ஜி ஹிராமட்ஸு டெல்லியில் கூறும்போது, “டோக்லாம் பிரச்சினையை ஜப்பான் மிகவும் உன்னிப்பாக கண்காணித்துவருகிறது. தற்போதைய பதற்றத்தால் பிராந்திய அமைதிக்கு பாதிப்பு ஏற்படும். பூடானுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியா செயல்படுவதை நாங்கள் உணர்ந்துள்ளோம்.

இதுதொடர்பாக சீனாவுடன் ராஜ்ஜிய ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார். ஜப்பானும் அதேயேவிரும்புகிறது. எல்லைப் பிரச்சினையில் தன்னிச்சையாக முடிவெடுப்பது தவறு. படைபலத்தால் எல்லையை மாற்ற முயற்சிக்கக்கூடாது”

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

மருத்துவ செய்திகள்

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...