பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி

ஐநா சபையில் இந்தியாவுக்கு எதிராக போலியான புகைப் படத்தைக் காட்டி அனுதாபம்தேட முயன்ற பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. காஷ்மீர் விவகாரம்தொடர்பாக ஐநா சபையில் பேசிய பாகிஸ்தான் பிரதிநிதியான மலிஹா லோதி காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக குற்றம் சாட்டினார். அப்போது முகம் முழுவதும் பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்ட பெண்ணின் புகைப் படத்தையும் அவர் காட்டினார். அந்தப் புகைப்படம் காஷ்மீரில் எடுக்கப் பட்டது என்றும் காஷ்மீரில் இதுபோன்ற தாக்குதல்கள் நடப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும் இதுதான் இந்திய ஜனநாயகத்தின் உண்மை முகம் என்றும் அவர் கூறினார்.

அந்த புகைப்படம் பாகிஸ்தான் வெளியுறவுத்துறையின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்திலும் வெளியிடப் பட்டது. ஆனால் உண்மையில் அந்தப் பெண காஷ்மீரைச்சேர்ந்தவர் அல்ல என்பதை இந்தியா தெளிவு படுத்தியது.

அந்தப்பெண் 17 வயதான பாலஸ்தீனத்தின் காஸா பகுதியைச்சேர்ந்த ரவியா அபு ஜோமா ஆவார்.மேலும் அந்தப்படம் கடந்த 2014-ம் ஆண்டில் காஸா நகர் மீது இஸ்ரேல் போர்விமானங்கள் தாக்குதல் நடத்தியபோது ரவியாவின் முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.

அந்த பாலஸ்தீன பெண்ணை, காஷ்மீர் பெண்ணாக ஐநா சபையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் நாடக மாடியது. ஆனால் அவரின் நாடகம் சிலமணி நேரங்களில் அம்பலமானதால் ஐநா சபையில் பாகிஸ்தானுக்கு பெரும் தலைக்குனிவு ஏற்பட்டது
 

இதைத்தொடர்ந்து பாகிஸ்தானின் அட்டூழியத்தை வெளிச்ச மாக்கும் வகையில் இந்திய தக்கபதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த மே மாதம் உமர் ஃபயாஸ் என்ற ராணுவவீரர் திருமண நிகழ்ச்சியில் இருந்து வெளியே இழுத்து வரப்பட்ட கொடூரமாக கொல்லப்பட்ட புகைப்படத்தை காட்டி இந்தியபிரதிநிதி பலோமி திரிபாதி பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தார்.

மேலும் காசா புகைப் படத்தைக் காட்டி பாகிஸ்தான் அனுதாபம்தேட முயற்சிப்பதாகவும் பாகிஸ்தானின் முகத்திரையை ஐநா அவையில் கிழித்தார். இது தொடர்பாக ஐநா.,வுக்கான இந்திய தூதர் அக்பரூதின் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்துதெரிவித்துள்ளார்.

அதாவது போலியான புகைப் படத்தைக் காட்டி பாகிஸ்தான் தவறான கதைகளை கட்டியது. ஆனால் இந்தியா உண்மையான புகைப் படங்களை பயன்படுத்து பாகிஸ்தான் தீவிர வாதாத்தின் உண்மை முகத்தை காட்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...