தமிழகத்தில் முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.3.66 லட்சம் கோடி கடனாக வழங்கப் பட்டுள்ளது

வங்கியில் கணக்குத்தொடங்கும் சிரமத்தை போக்கும் வகையில், ஜன்தன் யோஜனா திட்டத்தை பிரதமர் மோடி கொண்டுவந்துள்ளார். இதனால் தற்போது நாடுமுழுவதும் 96 சதவீதம் பேர் வங்கிக்கணக்கு தொடங்கியுள்ளனர். மேலும், 87 சதவீதம் பேர் ஆதார் அட்டையை பெற்றுள்ளனர். இதில் தமிழகம் முன்னோடியாக 87 சதவீதம்பேருக்கு ஆதார் அட்டையை வழங்கியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் 99.9 சதவீதம் பேர் ஆதார் அட்டையை பெற்றிருப்பது மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பை காட்டுகிறது. ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள வங்கிக்கணக்குகளில் ரூ.66,466 கோடி சேமிக்கப்பட்டிருப்பதன் மூலம், சாதாரணமக்களின் பணம் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, வங்கிக்கணக்கு வைத்துள்ளோர் ரூ.12 மட்டுமே செலுத்தி விபத்துக் காப்பீடு வழங்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

நாடுமுழுவதும் ஆண்டுதோறும 5 லட்சம் விபத்துகள் நிகழ்கின்றன. இதில் 1.5 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். விபத்தினால் பாதிக்கப் படுபவர்களின் குடும்ப நலனுக்காக இந்த காப்பீடுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொது மக்களின் நலனுக்காக, அடல் ஓய்வூதியத்திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 இளைஞர்கள், மகளிர் உரிய வேலை வாய்ப்பைப் பெறும்வகையில், முத்ரா திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார்.

இத்திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 9.22 கோடி பேருக்கு வங்கிக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கோடிக் கணக்கான தொழில் முனைவோர் உருவாக்கப்பட்டுள்ளனர். இத்திட்டத்தில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தில் முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.3.66 லட்சம் கோடி கடனாக வழங்கப் பட்டுள்ளது. இளம் தொழில் முனைவோர் ஒவ்வொருவரும், குறைந்த பட்சம் 100 பேருக்காவது வேலை வழங்கிட வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொள்ள வேண்டும் என்றார்.

சேலம் மாவட்ட அளவில் முத்ரா கடன் திட்ட ஊக்குவிப்பு முகாம் பெரியார் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் வரவேற்றார்.
 நிகழ்ச்சியில், முத்ரா திட்டத்தின் கீழ் கடனுதவியை பயனாளிகளுக்கு வழங்கி, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது:

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...