தூத்துக்குடி விமானநிலையத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னை ஆர்கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் பா.ஜ.க போட்டியிடுவது குறித்து கட்சிதலைமை முடிவு செய்யும். இரட்டை இலைசின்னம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு வழங்கப் பட்டு உள்ளது. நீண்டநாள் போராடி சின்னத்தை வாங்கி உள்ளனர். இதில் விசேஷமாக ஒன்றும் இல்லை.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வத்துக்கு இரட்டை இலையை பெற்று கொடுப்பதில் பா.ஜ.க பின்னணியில் இருந்துசெயல்பட்டு இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறி இருக்கிறார். அப்படி கூறுவதற்கு தான் காங்கிரஸ் இருக்கிறது. அவர்கள் ஆட்சியில் செய்த விஷயங்களை தற்போது கூறிவருகிறார்கள்.
இரட்டை இலை சின்னம் வழங்கப் பட்டதில் பா.ஜனதாவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. இது தேர்தல் ஆணையத்தின் முடிவு. திமுக. தலைவர் கலைஞரை மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடி பார்த்ததால் காங்கிரசார் பயத்துடன் உள்ளனர். ஒட்டுண்ணி போன்று பலகட்சிகள் தி.மு.க.வுடன் ஒட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆபத்துவருமோ என்ற அச்சத்தில் பேசுகிறார்கள்.
இரட்டை இலை சின்னம் பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். கழகங்கள் இல்லா தமிழகம் உருவாகும் வாய்ப்பு உள்ளது என்று நம்புகிறேன். எங்கள் இறுதிஇலக்கு அது. அதற்கு என்ன செய்யவேண்டுமோ, அதனை செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.