தீய சக்திகளை ஒழிக்க அதிமுக ஒன்றுசேர வேண்டும்

ஈரோடு கிழக்கு சட்ட சபை இடை தேர்தலுக்காக அதிமுக ஒன்றுசேர வேண்டும் என்று பாஜக கூறிவருகிறது. ஆனால் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலுக்கு ஓபிஎஸ், எடப்பாடி இருவரும் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளதால் சின்னம் முடங்கும்நிலை ஏற்பட்டு உள்ளது.

இதையடுத்தே அண்ணாமலை இன்று எடப்பாடியை மற்றும் ஓ பன்னீர்செல்வத்தை சென்று சந்தித்துள்ளார். எடப்பாடி – ஓபிஎஸ் ஒன்று சேரவேண்டும் என்று இருவரிடமும் பாஜக தரப்பு கேட்டுஇருக்கிறது. அண்ணாமலை – சி டி ரவி இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். செய்தியாளர்சந்திப்பில் சிடி ரவி அளித்த பதிலில், பிப்ரவரி 7ம் தேதி வரை பொறுமையாக இருங்கள். திமுகவை எம்ஜிஆர் தீயசக்தி என்று கூறினார். ஜெயலலிதாவும் தீய சக்தி என்று கூறினார். அந்த தீயசக்திக்கு எதிராக மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். திமுகஆட்சிக்கு எதிரான மனநிலை இருக்கிறது. மக்கள் நாளுக்குநாள் திமுக மீதான ஆதரவை இழந்து வருகிறார்கள். ஒன்றாக நிற்கவேண்டும் அதிமுக எதிர்க் கட்சியாக ஒன்றாக இருக்க வேண்டும். திமுக கூட்டணியை அப்போதுதான் எதிர்க்கமுடியும். எதிர்க்கட்சியாக தனிதனியாக நிற்காமல் ஒன்றாக நில்லுங்கள் என்று சொல்லி இருக்கிறோம்.

அதுதான் பாஜகவின் விருப்பம். டெல்லியின் விருப்பம் அதுதான். எதிர்க்கட்சியாக நாம் ஒன்றுஇணைய வேண்டும் என்று கூறி உள்ளோம். பாஜக போட்டியா ? திமுகவை வீழ்த்த, அதிமுக ஒன்றுபடவேண்டும் என்பதே எங்கள் நிலை; பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா அனுப்பிய செய்தியை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் எடுத்துரைத்தோம். அது என்ன என்பதை வெளிப் படையாகக் கூற முடியாது, என்று சிவி ரவி கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...