அனைத்து நதி நீர்ப் பிரச்னைகளுக்கும் தீர்வுகாண மத்திய அரசு முயற்சித்து வருகிறது

கோதாவரி நதிநீரை தமிழகத்துக்கு கொண்டுவந்து, அனைத்து நதி நீர்ப் பிரச்னைகளுக்கும் தீர்வுகாண மத்திய அரசு முயற்சித்து வருகிறது என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்

திருச்சிவிமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி: விவசாயிகளின் பிரச்னையைத் தீர்க்க மத்திய அரசு பெரும்முயற்சி எடுத்து வருகிறது. மண் பரிசோதனைக்காக நில வள அட்டை, பயிர்ப் பாதுகாப்புத் திட்டம் போன்ற பலதிட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசின் பங்கீட்டுத்தொகை செலுத்தப்பட்ட பிறகும் மாநில அரசு காப்பீட்டு தொகையை விவசாயிகளிடம் கொண்டுசேர்ப்பதில் தாமதமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. விவசாயிகளுக்கு கிடைக்கவேண்டிய பயிர்க் காப்பீட்டுத்தொகை கிடைக்கவில்லை. 

காவிரிப் பிரச்னையில் இன்னும் 4 வாரங்களில் தீர்ப்புவர இருக்கிறது. காவிரிப் பிரச்னையில் என்ன செய்திருக்கிறீர்கள் எனக் கேள்விகேட்பவர்கள் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது என்ன செய்தார்கள். தாங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது பிரச்னையைத் தீர்த்து வைக்காதவர்கள் இன்று கேள்விக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். 


காமராஜர் பலஅணைகளைக் கட்டினார். திமுக, அதிமுக ஆட்சிக் காலங்களில் எத்தனை அணைகள் கட்டப்பட்டன. பாலாற்றின் குறுக்கே ஆந்திரம் அணைகட்டுகிறது. காவிரியின் குறுக்கே அணைகட்டுகிறார்கள். ஆனால், தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை கேள்விக் குறியோடு பார்க்கவேண்டும். அதனால் தான் மத்திய அரசு கோதாவரி நதிநீரை தமிழகத்துக்கு கொண்டுவந்து இங்குள்ள அனைத்து நீர்ப் பிரச்னைகளுக்கும் தீர்வுகாண முயற்சி செய்துவருகிறது. 


தற்போது தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் முழுநோக்கம் கட்சியைப் பலப்படுத்துவதுதான். உள்ளாட்சித் தேர்தலில் எங்கள் வளர்ச்சி புலப்படும். இரண்டு கழகங்களுக்கும் இடையில் தான் நாங்கள் போட்டியிட்டுக் கொண்டிருக்கிறோம். எங்கள் பலத்தை காண்பிப்பது இப்போது நோக்கமாக இருக்கிறது. நவீன நகரங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மாநில அரசு சரியாக பயன்படுத்த வில்லை. இதை கண்டித்து விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார் தமிழிசை சௌந்தரராஜன்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...