கார்த்தி சிதம்பரம் தன்னிடம் ரூ.6. 5 கோடி கேட்டார்; இந்திராணி

ஐ.என்.எக்ஸ் மீடியாவழக்கில் மாஜி நிதி அமைச்சரின் மகன் கார்த்திசிதம்பரம் தன்னிடம் ரூ.6. 5 கோடி கேட்டார் என சி.பி.ஐ., அதிகாரிகளின் விசாரணையின் போது இந்திராணி கூறினார். இருவரையும் ஒன்றாகவைத்து நடத்தப்பட்ட விசாரணையில் கார்த்தி சிதம்பரம் பதில் ஏதும் கூறமுடியாமல் திணறினார்.


கடந்த 3 நாட்களாக காவலில்வைத்து சிபிஐ அதிகாரிகள் துருவிதுருவி கார்த்தியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்திராணியை அழைத்து இரு வரிடமும் அதிகாரிகள் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

ஐ.என்.எக்ஸ்., மீடியாவுக்கு அன்னிய முதலீட்டு வாரியத்தின் அனுமதியை பெற்றுதர கார்த்திசிதம்பரம் 3.5 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கார்த்திசிதம்பரம் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்தவழக்கில் அவர் கைது செய்யப்பட்டு சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

 

இந்நிலையில், கார்த்தியை டில்லியிலிருந்து மும்பை அழைத்துவந்த சிபிஐ அதிகாரிகள், சிறையில் உள்ள இந்திராணி முன்னிலையில் அவரிடம் விசாரணை நடத்தினர். சுமார் 3 மணிநேரம் நடந்த அப்போது இந்திராணி அளித்த வாக்குமூலம் அடிப்படையில் பலகேள்விகளை எழுப்பினர். இதற்காக பல ஆதாரங்களையும் காட்டினர்.

 

இதுதொடர்பாக சிபிஐ வட்டாரங்கள் கூறுகையில், விசாரணையில் இந்திராணி பல்வேறு வாக்கு மூலங்களை அளித்துள்ளார். அதன்படி

* ஹயாட் ஓட்டலில் கார்த்தியை சந்தித்தேன்.
* 1 மில்லியன் அமெரிக்கடாலர் (6. 5 கோடி ) பணம் வேண்டும் என கார்த்தி கேட்டார்.
* 3.5 கோடி ரூபாய் பணம் டிபாசிட் செய்யப் பட்டு விட்டதாக தெரிவித்தேன்.
* பணம் எவ்வாறு கொடுக்கப்பட்டது என்பது குறித்தும் இந்திராணி விளக்கினார்.
இதுபோன்ற குற்றச்சாட்டை நேரிடையாக இந்திராணி வைத்ததால் கார்த்தி சிதம்பரத்திற்கு பெரும்நெருக்கடி ஏற்பட்டது. பதில் ஏதும் சொல்ல முடியாமல் திணறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

மருத்துவ செய்திகள்

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்

புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம்.