இன்டர்போல் போன்று பாரத் போல் உருவாக்கம் – அமித்ஷா பெருமிதம்

‘இன்டர்போல்’ எனப்படும் சர்வதேச குற்ற விசாரணை அமைப்பை போன்று இந்தியாவில் பாரத் போல் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில், மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.,) உருவாக்கியுள்ள பாரத்போல் இணையதளத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா துவங்கி வைத்தார். இந்தியாவில் சர்வதேச காவல் துறையின் தேசிய பணியகமாக உள்ள சிபிஐ அமைப்பானது சட்ட அமலாக்க ஏஜென்சிகள், உட்பட நாடு முழுவதும் உள்ள பல்வேறு புலனாய்வு ஏஜென்சிகளுடன் இணைந்து குற்றவியல் தொடர்பான விஷயங்களில் சர்வதேச புலனாய்வு அமைப்புடன் ஒத்துழைக்க இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது: ‘இன்டர்போல்’ எனப்படும் சர்வதேச குற்ற விசாரணை அமைப்பை போன்று இந்தியாவில் பாரத் போல் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சி.பி.ஐ., அமைப்பின் கீழ் செயல்படும் அமைப்பு சர்வதேச விசாரணை அமைப்புகளுக்கு உதவும். வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லும் குற்றவாளிகளை பிடிக்க பாரத் போல் அமைப்பு உதவி செய்யும்.

சர்வதேச போலீஸ் உதவியை விரைவாக அணுக முடியும். சி.பி.ஐ.,யால் உருவாக்கப்பட்ட பாரத்போல் போர்டல், நமது விசாரணை நிறுவனங்களின் உலகளாவிய அணுகலை மேம்படுத்தும், அனைவருக்கும் பாதுகாப்பான பாரதம் என்ற அரசாங்கத்தின் பார்வையை நிறைவேற்றும். இன்று ஒரு முக்கிய நாள். நமது நாட்டின் சர்வதேச விசாரணைகளை பாரத்போல் புதிய சகாப்தத்திற்கு கொண்டு செல்லும். குற்றங்களை கட்டுப்படுத்த திறம்பட செயல்பட முடியும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ ...

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ.7,200 கோடி திட்டங்கள். பிரதமர் நரேந்திர மோடி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி ஒரு 10 பவுன் நகைக்காக தனிப்படை அமைத்து எவ்வித ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல் செய்யும் காங்கிரஸ்;பிரதமர் மோடி குற்றச்சாட்டு பீஹாரில் ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்ப ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனை வெற்றி; இந்திய ராணுவம் பெருமிதம் லடாக்கில் சுமார் 15,000 அடி உயரத்தில் ஆகாஷ் வான் ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உ ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உதவும் புதிய திட்டம்: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு விவசாயிகளுக்கு உதவும் ரூ.24 ஆயிரம் கோடி தன் தானிய ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்பட ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்படுத்தும் நோக்கில் தேசிய இளையோர் சமையல் போட்டி தொடக்கம் மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து பிஎச்டி வர்த்தக மற்றும் ...

மருத்துவ செய்திகள்

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...