நல்லதையே விளையுங்கள். நல்லது விளையும்

திரு ஸ்டாலின், "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை கருப்பு என்னும் நெருப்பு அணையாது."

ஸ்டாலின் அவர்களே,

முதலில் உங்கள் ஒட்டுமொத்த குடும்பத்தின் மேல் படர்ந்துள்ள ஊழல் என்னும் கருப்பை அகற்றுங்கள்.

திரு பென்னி குயிக் என்னும் ஆங்கிலேயர் தனது சொந்த பணத்தில் முல்லை பெரியாறு அணையை கட்டியதாக சொல்வார்கள்.

கடந்த 50 வருடங்களில் உங்கள் கட்சி மாநிலத்திலும் மத்தியில் கூட்டணியாக ஆட்சியில் இருந்த போது வருமானத்திற்கு மிக அதிகமாக முறைகேடாக சொத்து குவித்ததாக உலகெங்கும் உள்ள தமிழர்கள் இன்றும் பேசி கொண்டு இருக்கிறார்கள்.

அதன் ஒரு பகுதியாக தான் சர்க்காரியா கமிஷன் குற்ற சாட்டில் இருந்து விடுபட திருமதி காந்தியிடம் சரண் அடைந்து 1974ல் காவிரி ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல், கர்நாடகாவில் அணைகள் கட்ட அனுமதி அளித்ததன் விளைவே இன்றும் காவிரி நீர் பங்கீட்டு பிரச்சனை தீராமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்று தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் சொல்லி வருகிறார்கள்.

எனவே முறை கேடாக சேர்த்த சொத்தைக் கொண்டு தமிழகத்தில் காவிரியின் குறுக்கே சிறு சிறு அணைகளை கட்டி அதிகமாக மழை பெய்யும் காலங்களில் வரும் உபரி நீரை சேமித்து வறட்சியான காலங்களில் அதை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து ஏழை விவசாயிகளின் துயரை உங்கள் குடும்பம் துடைக்கலாமே.

தமிழகம் தாழ்வு பிரதேசமாக இருப்பதால் மேட்டுர் போன்ற பெரிய அணைகள் கட்டுவது சாத்தியமில்லை என வல்லுநர்கள் கூறுகின்றனர்.எனவே பல சிறு அணைகள் கட்டுங்கள்.

அதன் மூலம் ஓரளவு உங்கள் குடும்பத்தின் மேல் படர்ந்துள்ள ஊழல் கறையை நீக்கலாம்.

அதுவரை நீங்கள் என்ன நடை போட்டாலும் ஆட்சி என்னும் கட்டிலில் ஏற முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நேர்மை என்னும் வெள்ளையை அணிந்து கொண்டு இந்த தலைமுறை மற்றும் அடுத்த தலைமுறையின் வளமான வாழ்வுக்கும் பாடுபட்டு வரும் மோடி என்னும் ஜீவ நதி, உங்களைப் போன்ற ஊழல் இரட்டைவாதிகள் தவறான முறையற்ற போராட்டங்கள் மூலம் தமிழகத்தில் கலவரம் மற்றும் பிரிவினை என்ற நெருப்பை மூட்ட முயன்றால்,அதை அணைத்து போகும் இடங்களில் எல்லாம் பசுமையை உண்டாக்கும்.

போகும் இடங்களில் எல்லாம் நல்லதையே விளையுங்கள். நல்லது விளையும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவுடன் நல்ல உறவு உள்ளது  ...

இந்தியாவுடன் நல்ல உறவு உள்ளது – டிரம்ப் பெருமிதம் 'இந்தியாவுடன் தனக்கு நல்ல உறவு இருக்கிறது' என அமெரிக்க ...

வட மாநிலத்தவர் குறித்து அமைச்ச ...

வட  மாநிலத்தவர் குறித்து அமைச்சர் அன்பரசன் சர்ச்சை பேச்சு – அண்ணாமலை கண்டனம் '' வட மாநிலத்தவர்கள் பன்றி குட்டி போட்டது போன்று ...

சுங்க சாவடிகளில் முறைகேடு மத்த ...

சுங்க சாவடிகளில் முறைகேடு மத்திய அரசு நடவடிக்கை தடை செய்யப்பட்ட முகமைகளால் நிர்வகிக்கப்பட்டு வந்த சுங்கச்சாவடிகளின் தடையற்ற ...

சத்திஷ்கரில் 30 மாவோயிஸ்டுகள் ச ...

சத்திஷ்கரில் 30 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி என்கவுண்டரில் ...

கடந்த 2 ஆண்டுகளில் 1200 சூதாட்ட தளங ...

கடந்த 2 ஆண்டுகளில் 1200 சூதாட்ட தளங்கள் முடக்கம் ஆன்லைன் கேமிங்கின் அடிமையாக்கும் தன்மை மற்றும் நிதி இழப்பு ...

சுங்க கட்டணங்களில் சலுகைகள் வழ ...

சுங்க கட்டணங்களில் சலுகைகள் வழங்கப்படும் – நிதின் கட்கரி நாட்டின் முக்கிய நகரங்கள் மற்றும் துறைமுகங்களை இணைக்கும் தரைவழி ...

மருத்துவ செய்திகள்

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...