பசியும், பட்டினியும் இல்லாத பாரதம்

திமுக ஆட்சி கொடுக்கும் ரூ.1000/- இல்லையென்றால் தமிழக மக்கள் பட்டினி தான் கிடக்க வேண்டும் என தமிழக அமைச்சர் தா.மோ.அன்பரசன் அகங்காரத்தோடு பேசி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மேலும் இந்தியாவில் தமிழகம் மற்றும் கேரளாவில் தான் மக்கள் மூன்று வேளையும் உணவு உண்ணுகிறார்கள் மஹாராஷ்ட்ரா உள்பட மற்ற மாநிலங்களில் 30% முதல் 40% மக்கள் ஒருவேளை தான் உணவு உண்ணுகிறார்கள் என்று உண்மைக்கு மாறான பொய்யான தகவலை பொதுவெளியில் பேசி இருக்கிறார்.
ஆனால் உண்மை என்னவெனில்…

பசியும், பட்டினியும் இல்லாத பாரதத்தை காணவேண்டும் என்கிற உன்னதமான நோக்கத்தோடு அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டம் என்கிற பெயரில் ஏழைகளுக்கு உணவளிக்கும் திட்டத்தை முன்னாள் பாரத பிரதமர் பாரத ரத்னா திரு.அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் கொண்டு வந்தார்கள்.

பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் பொறுப்பேற்ற பிறகு மத்திய அரசு சார்பில் மாதந்தோறும் ஒவ்வொரு நபருக்கும் 5 கிலோ அரிசி மற்றும் 1 கிலோ பருப்பை நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் மானியமாக வழங்கி வருகிறார். அதுவும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் இருந்து இலவசமாக வழங்கி வருகிறார். தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தில் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிற உணவுப் பொருட்கள் அனைத்தும் மத்திய அரசு மானியமாக வழங்கி வருகிற பொருட்கள் தான்.
உண்மை நிலையை மறைத்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் திமுக ஆட்சி கொடுக்கும் ரூ.1000/- பணத்தில் தான் தமிழக மக்கள் பசியாறுகிறார்கள் என்று பேசி இருப்பது திமுகவின் ஆணவப் போக்கை வெளிப்படுத்துகிறது.

மேலும் திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்டு வருகிற ரூ.1000/- மகளிர் உரிமைத் தொகையை வீட்டுவரி உயர்வு, சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால்விலை உயர்வு என திமுக அரசே பல பெயர்களில் வரியை உயர்த்தி மக்களிடம் இருந்து கட்டண உயர்வு மூலம் பலமடங்கு திரும்ப வசூலித்து விடுகிறது.

திருடர்கள் வழிப்பறி செய்வது போல இந்த திராவிடர்கள் ஆட்சியாளர்கள் என்கிற பெயரில் அனைத்து வரிகளையும் உயர்த்தி கட்டண உயர்வு என்கிற பெயரில் மக்களிடம் இருந்து “வரி”ப்பறி செய்து வருகிறார்கள்.

மேலும் திமுக ஆட்சிப் பொறுப்பேற்கும் போது 2021- 2022 நிதியாண்டில் தமிழகத்தின் கடன் தொகை ரூ.4,56,660.99/- கோடியாக இருந்தது. அது தற்போது ரூ.8,33, 361/- கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தின் பெயரில் திமுக அரசு ரூ.3,76,700.81/- கோடி கடன் வாங்கி இருக்கிறது. அடுத்த மூன்று மாதங்களில் மேலும் ரூ.1.05/- லட்சம் கோடி கடன் வாங்க திமுக அரசு திட்டமிட்டுள்ளது.

கடன் வாங்கி ஆட்சி நடத்தும் போதே திமுக அரசு இவ்வளவு ஆணவமாக பேசுகிறதே? மாநிலத்தின் வருவாயை அதிகரிக்க உற்பத்தி சார்ந்த துறைகளில் முதலீடு செய்ய, வளர்ச்சித் திட்டங்களில் முதலீடு செய்ய கடன் வாங்குவதில் கூட ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் மாநிலத்தின் நிர்வாக செலவினங்களுக்காகவும், ஏற்கனவே வாங்கிய கடனை அடைப்பதற்காகவும் கடன் வாங்குவது எவ்வளவு மோசமானது என்பது குறித்து திமுக அரசு சிந்திப்பதாக தெரியவில்லை.

கடன் வாங்கி ஆட்சி நடத்தும் போதே ஆணவத்தோடும், அகங்காரத்தோடும் திமிராக பேசுகிறதே திமுக? திமுக திருத்துவதற்கு வாய்ப்பே இல்லை என்பதற்கும் திமுக அமைச்சர்களின் ஆணவ நடவடிக்கைகளும் ஒரு உதாரணம்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூ.1000/- வழங்குவதாக பெருமை பேசுகிறதே திமுக அரசு…
திமுக ஆட்சிக்கு வந்த போது தமிழகத்திலுள்ள ஒவ்வொரு குடும்பத்தின் பெயரில் இருந்த கடன் ரூ.2,15,517/- கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்திலுள்ள ஒவ்வொரு குடும்பத்தின் பெயரிலும் ரூ.3,70,026/- (வருகிற 2025 மார்ச் மாதம் வரும் போது தமிழகத்தின் மொத்த கடன்தொகை அளவின் விகிதாச்சார அடிப்படையில்) உயர்த்தியுள்ளதே திமுக அரசு. அதுவும் மூன்றே ஆண்டுகளில் ரூ.1,54,509/- கடனை கூடுதலாக ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் சுமக்க வைத்திருக்கிறதே அதற்கு பொறுப்பேற்க வேண்டியது திமுக தானே அதுகுறித்து திமுக தலைவர்கள் பேசத்தயாரா? தமிழக முதல்வர் திரு. M. K. Stalin அவர்கள் இதற்கு பதிலளிப்பாரா?.

நன்றி H.ராஜா

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி க ...

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீர்கள் – அண்ணாமலை கேள்வி அரசுப் பள்ளிகளில் இலவசமாக மூன்று மொழிகள் கற்கும் வாய்ப்பை ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அ ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய தஸ்ய கல்வி கொள்கை – மத்திய கல்வி  அமைச்சர் 'புதிய கல்விக் கொள்கை தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அனைத்து ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவோம் – பிரதமர் மோடி அறிவுரை டில்லியில் இன்று (பிப்.,17) அதிகாலை நில அதிர்வு உணரப்பட்ட ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ 9 லட்சம் கோடி ஏலக்காய் எட்டும் – பிரதமர் மோடி உறுதி 'ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ.9 ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் R ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் – ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் 'யாரையும் புண்படுத்தும் விஷயங்களை நாங்கள் செய்ய மாட்டோம்' என ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப்பது மகிழ்ச்சி – பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தமிழ்ச் சங்கமம் நடப்பது ...

மருத்துவ செய்திகள்

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.