புளியின் மருத்துவக் குணம்

 இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ குளிர்ச்சி தருவதாகவும், காய் பித்தம் தணிப்பதாகவும் பழம் குடல் வாயுவகற்றி குளிர்ச்சி உண்டாக்கி மலமிளக்குவதாகவும், பட்டை சதை நரம்புகளைச் சுருங்கச் செய்து தாதுபலம் தருவதாகவும், விதை சிறுநீர் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

புளியம் பூவை எடுத்து அம்மியில் வைத்து மைபோல அரைத்து கண்ணைச்சுற்றிப் பற்றுப் போட்டுவர, கண்சிவப்பு, கண்வலி குணமாகும்.

உப்பு, புளி சம அளவு எடுத்து அரைத்து உள்நாக்கில் தடவி வர உள்நாக்குச் சதை வளர்வது தடைபடும்.

ஒரு கைப்பிடியளவு புளியம் பூவை சட்டியிலிட்டு 500 மி.லி வீதம் தண்ணீர்விட்டு 250 மி.லியாக சுண்டக்காய்ச்சி வேளைக்கு 100 மி.லி வீதம் காலை, மாலை இரண்டு நாட்கள் கொடுத்துவர ஜலதோஷம் குணமாகும்.

புளியம் பூவை கைப்பிடி அளவு எடுத்து சட்டியிலிட்டு கால்லிட்டர் தண்ணீர்விட்டு 125 மி.லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்துக் காலை, மாலை கொடுத்துவர நீர்க்கடுப்பு நின்று குணமாகும்.

நன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்
டாக்டர். மு. போத்தியப்பன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...