புளியின் மருத்துவக் குணம்

 இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ குளிர்ச்சி தருவதாகவும், காய் பித்தம் தணிப்பதாகவும் பழம் குடல் வாயுவகற்றி குளிர்ச்சி உண்டாக்கி மலமிளக்குவதாகவும், பட்டை சதை நரம்புகளைச் சுருங்கச் செய்து தாதுபலம் தருவதாகவும், விதை சிறுநீர் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

புளியம் பூவை எடுத்து அம்மியில் வைத்து மைபோல அரைத்து கண்ணைச்சுற்றிப் பற்றுப் போட்டுவர, கண்சிவப்பு, கண்வலி குணமாகும்.

உப்பு, புளி சம அளவு எடுத்து அரைத்து உள்நாக்கில் தடவி வர உள்நாக்குச் சதை வளர்வது தடைபடும்.

ஒரு கைப்பிடியளவு புளியம் பூவை சட்டியிலிட்டு 500 மி.லி வீதம் தண்ணீர்விட்டு 250 மி.லியாக சுண்டக்காய்ச்சி வேளைக்கு 100 மி.லி வீதம் காலை, மாலை இரண்டு நாட்கள் கொடுத்துவர ஜலதோஷம் குணமாகும்.

புளியம் பூவை கைப்பிடி அளவு எடுத்து சட்டியிலிட்டு கால்லிட்டர் தண்ணீர்விட்டு 125 மி.லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்துக் காலை, மாலை கொடுத்துவர நீர்க்கடுப்பு நின்று குணமாகும்.

நன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்
டாக்டர். மு. போத்தியப்பன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...