ஜி.எஸ்.டி., ரீபண்டு பிரச்னைக்கு விரைவில் தீர்வு

ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளின், ஜிஎஸ்டி., ரீபண்டுபிரச்­னைக்கு, நிதி ­அமைச்­ச­கத்­தி­டம் பேசி, விரை­வில் தீர்வுகாணப்­படும்,’’ என, மத்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில்துறை அமைச்­சர், சுரேஷ் பிரபு தெரிவித்துள்­ளார்.

இந்­தியா, 2017, ஜூலை 1ல், புதிய வரி விதிப்­பான, ஜிஎஸ்டி., நடை­மு­றைக்கு மாறியது. அது முதல், இந்­தாண்டு மார்ச்வரை, ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் செலுத்­திய, ஜி.எஸ்.டி.,யில், 17 ஆயி­ரத்து, 616 கோடி ரூபாய் திரும்ப அளிக்க, மத்­திய அரசு ஒப்பு­தல் அளித்­துள்­ளது. இதில், ஐஜிஎஸ்டி.,யில், 9,604 கோடி ரூபாய்; உள்­ளீட்டு வரி­யில், 5,510 கோடி ரூபாய் ஆகி­யவை அடங்­கும். இதுதவிர, மாநில அர­சு­க­ளின் வரிக்கழி­வு­கள் ஆகி­ய­வற்­றின் கீழ், 34 ஆயி­ரம் கோடி ரூபாய், ரீபண்ட் வழங்­கப்­பட்­டுள்­ளது.

எனி­னும், கணக்கு தாக்­க­லின்­ போது நேரும் தவ­று­கள், நடை­முறை சிக்­கல்­க­ளால் ஏற்­படும் தாம­தம் போன்­ற­வற்­றால், 40 சத­வீத அள­விற்கே ரீபண்ட் வழங்­கப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கிறது. இத­னால், ஏற்­று­ம­தி­ யா­ளர்­கள், நடை­முறை மூல­தன தேவை­களை சமா­ளிக்க முடி­யா­மல் திணறிவரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், டில்­லி­யில் இந்­திய ஏற்­று­மதி நிறு­வ­னங்­கள் கூட்­ட­மைப்­பின் நிகழ்ச்­சி­யில், மத்­திய அமைச்­சர் சுரேஷ்பிரபு பேசி­ய­தா­வது: ஜி.எஸ்.டி., ரீபண்ட், ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்கு மிக முக்­கிய பிரச்­னை­யாக உள்­ளது. அவர்­க­ளி­டம், திரும்­பப் பெற வேண்­டிய வரித்தொகை விப­ரங்­களை கேட்­டுள்­ளேன்.இப்­பி­ரச்­னையை நிதி­ய­மைச்­ச­ரின் கவ­னத்­திற்கு கொண்டு சென்று, விரை­வில் தீர்வு காண்­பேன்.

நாட்­டின் ஏற்­று­ம­தியை மேம்­ப­டுத்த, அனைத்து நட­வ­டிக்­கை­க­ளை­யும் மத்­திய அரசு எடுத்துவரு­கிறது. அத்­து­டன், அனைத்து துறை­க­ளி­லும், எந்­தெந்த வகை­யில் ஏற்­று­ம­தியை அதி­க­ரிக்­க­லாம் என்­பதை அறிக்­கை­யாக வழங்­கு­மா­றும், ஏற்­று­மதி மேம்பாட்டு கூட்­ட­மைப்­பி­டம் தெரி­வித்­துள்­ளேன். அந்த பரிந்­து­ரை­க­ளின் அடிப்­ப­டை­யில், மாநில அர­சு­க­ளின் ஒத்­து­ழைப்­பு­டன், ஏற்­று­ம­தியை மேம்­ப­டுத்த, வலி­மையான திட்­டம் தயா­ரிக்­கப்­படும்.

இது தொடர்­பாக, விரை­வில் அமைச்­ச­ரவை உய­ர­தி­கா­ரி­கள் கூட்­டத்­தைக்கூட்ட திட்­ட­மிட்­டுள்­ளேன். கடந்த, 2016 – 17ம் நிதி­யாண்டை விட, 2017 – 18ம் நிதி­யாண்­டில், நாட்­டின் ஏற்­று­மதி, 9.78 சத­வீ­தம் வளர்ச்சிகண்டு, 30 ஆயி­ரத்து, 284 கோடி டால­ராக உயர்ந்­துள்­ளது. இவ்­வாறு அவர் பேசி­னார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...