ஜி.எஸ்.டி., ரீபண்டு பிரச்னைக்கு விரைவில் தீர்வு

ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளின், ஜிஎஸ்டி., ரீபண்டுபிரச்­னைக்கு, நிதி ­அமைச்­ச­கத்­தி­டம் பேசி, விரை­வில் தீர்வுகாணப்­படும்,’’ என, மத்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில்துறை அமைச்­சர், சுரேஷ் பிரபு தெரிவித்துள்­ளார்.

இந்­தியா, 2017, ஜூலை 1ல், புதிய வரி விதிப்­பான, ஜிஎஸ்டி., நடை­மு­றைக்கு மாறியது. அது முதல், இந்­தாண்டு மார்ச்வரை, ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் செலுத்­திய, ஜி.எஸ்.டி.,யில், 17 ஆயி­ரத்து, 616 கோடி ரூபாய் திரும்ப அளிக்க, மத்­திய அரசு ஒப்பு­தல் அளித்­துள்­ளது. இதில், ஐஜிஎஸ்டி.,யில், 9,604 கோடி ரூபாய்; உள்­ளீட்டு வரி­யில், 5,510 கோடி ரூபாய் ஆகி­யவை அடங்­கும். இதுதவிர, மாநில அர­சு­க­ளின் வரிக்கழி­வு­கள் ஆகி­ய­வற்­றின் கீழ், 34 ஆயி­ரம் கோடி ரூபாய், ரீபண்ட் வழங்­கப்­பட்­டுள்­ளது.

எனி­னும், கணக்கு தாக்­க­லின்­ போது நேரும் தவ­று­கள், நடை­முறை சிக்­கல்­க­ளால் ஏற்­படும் தாம­தம் போன்­ற­வற்­றால், 40 சத­வீத அள­விற்கே ரீபண்ட் வழங்­கப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கிறது. இத­னால், ஏற்­று­ம­தி­ யா­ளர்­கள், நடை­முறை மூல­தன தேவை­களை சமா­ளிக்க முடி­யா­மல் திணறிவரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், டில்­லி­யில் இந்­திய ஏற்­று­மதி நிறு­வ­னங்­கள் கூட்­ட­மைப்­பின் நிகழ்ச்­சி­யில், மத்­திய அமைச்­சர் சுரேஷ்பிரபு பேசி­ய­தா­வது: ஜி.எஸ்.டி., ரீபண்ட், ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்கு மிக முக்­கிய பிரச்­னை­யாக உள்­ளது. அவர்­க­ளி­டம், திரும்­பப் பெற வேண்­டிய வரித்தொகை விப­ரங்­களை கேட்­டுள்­ளேன்.இப்­பி­ரச்­னையை நிதி­ய­மைச்­ச­ரின் கவ­னத்­திற்கு கொண்டு சென்று, விரை­வில் தீர்வு காண்­பேன்.

நாட்­டின் ஏற்­று­ம­தியை மேம்­ப­டுத்த, அனைத்து நட­வ­டிக்­கை­க­ளை­யும் மத்­திய அரசு எடுத்துவரு­கிறது. அத்­து­டன், அனைத்து துறை­க­ளி­லும், எந்­தெந்த வகை­யில் ஏற்­று­ம­தியை அதி­க­ரிக்­க­லாம் என்­பதை அறிக்­கை­யாக வழங்­கு­மா­றும், ஏற்­று­மதி மேம்பாட்டு கூட்­ட­மைப்­பி­டம் தெரி­வித்­துள்­ளேன். அந்த பரிந்­து­ரை­க­ளின் அடிப்­ப­டை­யில், மாநில அர­சு­க­ளின் ஒத்­து­ழைப்­பு­டன், ஏற்­று­ம­தியை மேம்­ப­டுத்த, வலி­மையான திட்­டம் தயா­ரிக்­கப்­படும்.

இது தொடர்­பாக, விரை­வில் அமைச்­ச­ரவை உய­ர­தி­கா­ரி­கள் கூட்­டத்­தைக்கூட்ட திட்­ட­மிட்­டுள்­ளேன். கடந்த, 2016 – 17ம் நிதி­யாண்டை விட, 2017 – 18ம் நிதி­யாண்­டில், நாட்­டின் ஏற்­று­மதி, 9.78 சத­வீ­தம் வளர்ச்சிகண்டு, 30 ஆயி­ரத்து, 284 கோடி டால­ராக உயர்ந்­துள்­ளது. இவ்­வாறு அவர் பேசி­னார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...