மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

 மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், வயிற்றுக் கடுப்பு, பித்த வாந்தி யாவும் நீங்கும். உடலின் வெப்பம் குறையும். நல்ல பலத்தை உருவாக்கும்.
ரத்தமாகவே போகும் சிறுநீர், ரத்தமூலம், சீத இரத்தம் இவை நீங்கும்.

மாதுளை உலர்ந்த பூ, கசகசா, வேம்பு இம்மூன்றையும் தனித்தனியாகத் தூள் செய்து, சமமாக எடுத்து, பிறகு ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு தினம் 3 வேளை, ஐந்து மிளகு அளவு இத்தூளை எடுத்து பாலுடன் கலந்து கொடுக்க நாளடைவில் மேற்கண்ட நோய்கள் நீங்கிக் குணமாகும்.

வாந்தி, மயக்கம், உஷ்ணம் ஆசனக் கடுப்பு, ரத்த மூலம் இவை நீங்க
தேவையான மாதுளம் பூக்களை எடுத்து அதன் பிழிந்த சாறு, அரை அவுன்ஸ் இதனுடன் கொஞ்சம் கற்கண்டு சேர்த்து தினமும் தொடர்ந்து 3 நாட்களுக்கு காலை – மாலை 2 வேளை சாப்பிட்டு வந்தால் படிப்படியாக நிவர்த்தியாகும்.

இருமல் குணமாக

உலர்ந்து உள்ள மாதுளை மொக்கை எடுத்து நன்றாக இடித்துச் சூரணமாக்கி, ஒரு உளுந்து பிரமாணம் எடுத்து சாப்பிட்டுச் சிறிதுத் தண்ணீர் அருந்த இருமல் நீங்கும்.

நன்றி : டாக்டர் ஏ.ஆர்.என்.துரைராஜ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தை பிரதமர் ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண்டாவது இடம் – பிரதமர் மோடி மகிழ்ச்சி செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் பசுமை தொழில்கள் ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது சம்பள கமிஷன் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 வது சம்பள கமிஷன் ...

திருக்குறளின் போதனைகள் உலகம் ம ...

திருக்குறளின் போதனைகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன – கவர்னர் ரவி 'திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுதும் எதிரொலிக்கின்றன' என, ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குக ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது – பிரதமர் மோடி புகழாரம் திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...