திருமணத்தின் மூலம் இந்தியாவுக்கு வந்த 5 லட்சம் பாகிஸ்தான் பெண்கள்: தீவிரவாதத்தின் புதுமுகம்

‘‘​பாகிஸ்​தானை சேர்ந்த 5 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட பெண்​கள், திரு​மணத்​தின் மூலம் இந்​தி​யா​வுக்​குள் வந்​துள்​ளனர். இது​போன்ற தீவிர​வாதத்​தின் புது​முகத்தை எதிர்த்து எப்​படி போராட போகிறோம்​?’’ என்று பாஜக எம்​.பி. நிஷி​காந்த் துபே விமர்​சித்​துள்​ளார்.

காஷ்மீரின் பஹல்​காமில் கடந்த 22-ம் தேதி தீவிர​வா​தி​கள் நடத்​திய தாக்​குதலில் 26 சுற்​றுலா பயணி​கள் உயி​ரிழந்​தனர். இதையடுத்​து, பாகிஸ்​தானியர்​களின் அனைத்து வித​மான விசாக்​களை​யும் மத்​திய அரசு ரத்து செய்​தது. அத்​துடன் இந்​தி​யாவை விட்டு வெளி​யேற உத்​தர​விட்​டது.

இந்​நிலை​யில், தீவிர​வாதத்​தின் புது​முக​மாக திரு​மணம் இருக்​கிறது என்று பாஜக எம்​.பி. நிஷி​காந்த் துபே விமர்​சனம் செய்​துள்​ளார். இதுகுறித்து தனது எக்ஸ் வலை​தளப் பக்​கத்​தில் நிஷி​காந்த் கூறுகை​யில், ‘‘திரு​மணத்​தின் மூலம் மட்​டும் 5 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட பாகிஸ்​தான் பெண்​கள் இந்​தி​யா​வுக்​குள் வந்​துள்​ளனர். அவர்​களுக்கு இன்​னும் இந்​திய குடி​யுரிமை வழங்​கப்​பட​வில்​லை. இது​போல் திரு​மணம் மூலம் இந்​தி​யா​வுக்​குள் வரும் பாகிஸ்​தான் பெண்​களின் எண்​ணிக்கை அதி​கரிப்​பது, தீவிர​வாதத்​தின் புது​முக​மாக தெரி​கிறது. இதை எதிர்த்து நாம் எப்​படி போராட போகிறோம். இந்த விஷ​யம் மிக​வும் கவலை அளிக்​கிறது’’ என்று விமர்​சித்​துள்​ளார்.

இந்​நிலை​யில், அட்​டாரி எல்​லை​யில் இந்​திய அதிகாரி அருண்​பால் நேற்று கூறியதாவது:பாகிஸ்​தானியர்​களுக்கு வழங்​கப்​பட்ட தூதரக, நீண்ட கால, அலு​வல் ரீதியி​லான விசாக்​களை தவிர்த்து மற்ற சிறப்பு விசாக்​கள், குறுகிய கால விசாக்​கள் அனைத்​தை​யும் மத்​திய அரசு கடந்த 27-ம் தேதி ரத்து செய்​தது. அதன்​பின் கடந்த 3 நாட்​களில் மட்​டும் இந்​தி​யா​வில் இருந்து 537 பாகிஸ்​தானியர்​கள் வெளி​யேறி உள்​ளனர். அதே கால கட்​டத்​தில் பாகிஸ்​தானில் இருந்து இந்​தி​யர்​கள் 850 பேர் நாடு திரும்பி உள்​ளனர். கடந்த ஞாயிற்​றுக்​கிழமை மட்​டும் 237 பாகிஸ்​தானியர்​கள் இந்​தி​யா​வில் இருந்து வெளி​யேறினர். 116 இந்​தி​யர்​கள் நாடு திரும்​பி உள்​ளனர்​.இவ்​வாறு அவர் கூறி​னார்​.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி டெல்​லி​யில் பிரம்​மாண்ட செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் தற்சார்பு திறன் வெளிப்படுத்தப்பட்டது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெங்களூருவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ...

புதுதில்லியில் இந்திய செயற்கை ...

புதுதில்லியில் இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க கண்காட்சி 2026-ஐத் திறந்து வைத்தார் பிரதமர் புதுதில்லியின் பாரத மண்டபத்தில் இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க ...

இந்து மக்களுக்கு எதிரான வெறுப் ...

இந்து மக்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல் முடிவுக்கு வந்துவிட்டது போட்றா வெடிய! இந்தியாவின் கைகளுக்குள் வந்த வங்கதேசம்; வெற்றி ...

இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக ...

இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் புதிய பிரதமர் அலுவலகம் ஒரு பார்வை அம்மாடியோவ்! இவ்வளவு பாதுகாப்பா?; ஒரு ஈ, எறும்பு கூட ...

வர்த்தக ஒப்பந்தம் குறித்து பொய ...

வர்த்தக ஒப்பந்தம் குறித்து பொய்களைப் பரப்பும் ராகுல்; மத்திய அமைச்சர்கள் சவுகான், கோயல் குற்றச்சாட்டு லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் ...

மருத்துவ செய்திகள்

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...