15ஆம் தேதி மாநி­லம் தழு­வியள­வில் போராட்­டம்

திமுக அர­சுக்கு எதிர்ப்புத்தெரி­வித்து, வரும் 15ஆம் தேதி மாநி­லம் தழு­வியள­வில் போராட்­டம் நடத்த இருப்­ப­தாக தமி­ழக பாஜக அறி­வித்­துள்­ளது.

தமி­ழ­கத்­தில் பால்விலையை பார்த்­தால் கண்­கள் இருண்டு போவ­தாக தமி­ழக பாஜக தலை­வர் அண்­ணா­மலை தெரி­வித்­துள்­ளார்.

முதன்­மு­றை­யாக தமி­ழக பாஜக மண்­டல அள­வில்போராட்­டம் நடத்­தப்போவ­தாக அறி­வித்­துள்­ளது. இதை­ய­டுத்து போராட்­டம் வெற்­றி­பெ­று­வதை உறுதிசெய்ய ­கட்சி நிர்­வா­கி­கள் முழுவீச்­சில் செயல்­பட்டு வரு­கின்­ற­னர்.

“திமுக ஆட்சிஅமைந்­தால் விடி­யலை தரு­கி­றோம் என்று சொல்­லி­விட்டு, பால்விலையை உயர்த்தி உள்ளது திமுக அரசு. இது­தான் மக்­கள் விடி­ய­லுக்­குத்தரும் விலையா?

“தமி­ழக அர­சின் ‘ஆவின்’ பால் வழங்­கும் நிறு­வ­னம், அதன் நிர்­வாகச் சீர்­ கேட்­டி­னால், நஷ்­டத்­தில் நடத்­தப் ­ப­டு­கிறது. தவ­றான நடை­மு­றை­யால் ஏற்­படும் வரு­வாய் இழப்பை மக்கள் தலை­யில் சுமத்­து­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது,” என்று அண்­ணா­மலை அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­ துள்­ளார்.

ஏற்­கெ­னவே வீட்டுவரி உயர்வு, சொத்து, தண்­ணீர், கழி­வு­ நீர் வரி ஆகி­ய­வற்­று­டன் மின்­கட்­­ணத்­தை­யும் பத்­தி­ரப்பதி­வுக் கட்­ட­ணத்­தை­யும் தமி­ழக அரசு தாறு­மா­றாக உயர்த்திஉள்­ள­தா­க குறிப்­பிட்­டுள்ள அவர், தற்­போது பச்­சி­ளம் குழந்­தை­க­ளுக்கு பயன் ­படும் பாலுக்­கான விலை­யை­யும் உயர்த்தி இருப்­பது, வாக்­க­ளித்த தமி­ழகமக்­களை வஞ்­சிக்­கும் செயல் எனச் சாடியு ள்­ளார்.

“அத்­தி­யா­வ­சிய பொருள்­களின் விலை­கள் எல்­லாம் ஏறு­மு­க­மாக உள்ளநிலை­யில், தமி­ழக மக்­க­ளின் வாழ்­வா­தா­ரம் மட்­டும் இறங்குமுகத்­தில் உள்­ளது. பால் விலையை உயர்த்தி, மக்­களை துன்­பப்­ப­டுத்­து­கிறது தி­முக அரசு,” என்று அண்­ணா­மலை தெரி­வித்­துள்­ளார். இதற்­கி­டையே, முதல் முறை­யாக, பாஜக சார்­பில் தமி­ழ­கத்­தில் மண்­டலள­வில் போராட்­டம் நடை­பெ­றும் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தமி­ழக பாஜக தலை­வ­ராக அண்­ணா­மலை பொறுப்­பேற்ற பின்­னர், மாநி­லம் தழு­விய அள­வில் சுமார் 1,200 மண்­ட­லங்­க­ளை­யும் உட்­ப­டுத்தி, போராட்­டம் நடை­பெறும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இம்­முறை அதிகக்கூட்­டத்தை திரட்­டிகாட்­டும் மண்­ட­லத் தலை­வர்­களை பிர­த­மர் மோடி நேரில் சந்­திப்­பார் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இத­னால் பாஜக நிர்­வா­கி­கள் முழுவீச்­சில் செயல்­பட்டு வரு­கின்­ற­னர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டு ...

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டுரையாக பகிர்ந்த பிரதமர் மோடி நீதி, கண்ணியம், தற்சார்பு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் தொடக்ககால ...

காசி செழுமை அடைகிறது

காசி செழுமை அடைகிறது "தற்போது காசி பழமையின் அடையாளமாக மட்டுமின்றி, முன்னேற்றத்தின் கலங்கரை ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அ ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அகற்றம் நாடு முழுவதும் சுகாதாரக் கழிவு மேலாண்மை ஒரு பெரிய ...

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு கடந்த நிதியாண்டில் (2024-25) ஏப்ரல்-மார்ச்) நாட்டின் ஏற்றுமதி, முந்தைய ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வா ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வாருங்கள் ; சீமானுக்கு நயினார் நாகேந்திரன் அழைப்பு ''தி.மு.க.,வை வீழ்த்த கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில ச ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில சுயாட்சி திமுக என்ற கட்சி தொடங்கியதே தேசப் பிரிவினையை முன்னிறுத்திதான். தொடக்கம் ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...