15ஆம் தேதி மாநி­லம் தழு­வியள­வில் போராட்­டம்

திமுக அர­சுக்கு எதிர்ப்புத்தெரி­வித்து, வரும் 15ஆம் தேதி மாநி­லம் தழு­வியள­வில் போராட்­டம் நடத்த இருப்­ப­தாக தமி­ழக பாஜக அறி­வித்­துள்­ளது.

தமி­ழ­கத்­தில் பால்விலையை பார்த்­தால் கண்­கள் இருண்டு போவ­தாக தமி­ழக பாஜக தலை­வர் அண்­ணா­மலை தெரி­வித்­துள்­ளார்.

முதன்­மு­றை­யாக தமி­ழக பாஜக மண்­டல அள­வில்போராட்­டம் நடத்­தப்போவ­தாக அறி­வித்­துள்­ளது. இதை­ய­டுத்து போராட்­டம் வெற்­றி­பெ­று­வதை உறுதிசெய்ய ­கட்சி நிர்­வா­கி­கள் முழுவீச்­சில் செயல்­பட்டு வரு­கின்­ற­னர்.

“திமுக ஆட்சிஅமைந்­தால் விடி­யலை தரு­கி­றோம் என்று சொல்­லி­விட்டு, பால்விலையை உயர்த்தி உள்ளது திமுக அரசு. இது­தான் மக்­கள் விடி­ய­லுக்­குத்தரும் விலையா?

“தமி­ழக அர­சின் ‘ஆவின்’ பால் வழங்­கும் நிறு­வ­னம், அதன் நிர்­வாகச் சீர்­ கேட்­டி­னால், நஷ்­டத்­தில் நடத்­தப் ­ப­டு­கிறது. தவ­றான நடை­மு­றை­யால் ஏற்­படும் வரு­வாய் இழப்பை மக்கள் தலை­யில் சுமத்­து­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது,” என்று அண்­ணா­மலை அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­ துள்­ளார்.

ஏற்­கெ­னவே வீட்டுவரி உயர்வு, சொத்து, தண்­ணீர், கழி­வு­ நீர் வரி ஆகி­ய­வற்­று­டன் மின்­கட்­­ணத்­தை­யும் பத்­தி­ரப்பதி­வுக் கட்­ட­ணத்­தை­யும் தமி­ழக அரசு தாறு­மா­றாக உயர்த்திஉள்­ள­தா­க குறிப்­பிட்­டுள்ள அவர், தற்­போது பச்­சி­ளம் குழந்­தை­க­ளுக்கு பயன் ­படும் பாலுக்­கான விலை­யை­யும் உயர்த்தி இருப்­பது, வாக்­க­ளித்த தமி­ழகமக்­களை வஞ்­சிக்­கும் செயல் எனச் சாடியு ள்­ளார்.

“அத்­தி­யா­வ­சிய பொருள்­களின் விலை­கள் எல்­லாம் ஏறு­மு­க­மாக உள்ளநிலை­யில், தமி­ழக மக்­க­ளின் வாழ்­வா­தா­ரம் மட்­டும் இறங்குமுகத்­தில் உள்­ளது. பால் விலையை உயர்த்தி, மக்­களை துன்­பப்­ப­டுத்­து­கிறது தி­முக அரசு,” என்று அண்­ணா­மலை தெரி­வித்­துள்­ளார். இதற்­கி­டையே, முதல் முறை­யாக, பாஜக சார்­பில் தமி­ழ­கத்­தில் மண்­டலள­வில் போராட்­டம் நடை­பெ­றும் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தமி­ழக பாஜக தலை­வ­ராக அண்­ணா­மலை பொறுப்­பேற்ற பின்­னர், மாநி­லம் தழு­விய அள­வில் சுமார் 1,200 மண்­ட­லங்­க­ளை­யும் உட்­ப­டுத்தி, போராட்­டம் நடை­பெறும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இம்­முறை அதிகக்கூட்­டத்தை திரட்­டிகாட்­டும் மண்­ட­லத் தலை­வர்­களை பிர­த­மர் மோடி நேரில் சந்­திப்­பார் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இத­னால் பாஜக நிர்­வா­கி­கள் முழுவீச்­சில் செயல்­பட்டு வரு­கின்­ற­னர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...