ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மற்றும் பூஞ்ச்மாவட்டங்களில் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்நடத்தியது.இதற்கு இந்திய ராணுவம் உரியபதிலடி கொடுத்தது. இதில் பாக்., வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர். மேலும் 3 பதுங்குகுழிகள் அழிக்கப்பட்டதுடன், அந்நாட்டு ராணுவ முகாம்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் டிரால்பகுதியில் ரோந்து சென்ற ராணுவ வீரர்கள் வாகனம் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனையடுத்து, அந்த பகுதியை ராணுவத்தினர் சுற்றிவளைத்துள்ளனர். தொடர்ந்து, அந்த பகுதியில் இருதரப்பிற்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்து வருகிறது. அந்த பகுதியில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 4 பேர் பதுங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ... |
தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ... |
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.