இந்திய வரலாற்றின் மாபெரும் மைல்கல்

உலக அரங்கில் நேரம்பார்த்து சதம் அடித்து விட்டார், நிச்சயம் புட்டீனுடனான ஒப்பந்தம் இந்திய வரலாற்றின் மாபெரும் மைல்கல். அதுவும் இந்த பரபரப்பான காலகட்டத்தில் அது மோடியின் வெற்றி.

ரஷ்யாவிடமிருந்து எஸ்.400 ஏவுகனைகனை தடுப்பு சாதனத்தை வாங்கினால் இந்தியா மேல் பொருளாதார தடை என மிக பகிரங்கமாக மிரட்டியும் இந்தியா வாங்கிவிட்டது. இது போக ரஷ்யாவுடன் கூட்டு ராணுவ பயிற்சியிலும் இறங்கிவிட்டது.

அமெரிக்காவிற்கு கடும் ஆத்திரம் சந்தேகமில்லை. ஆனால் உடனே பொருளாதார தடை விதிக்க முடியுமா? சிக்கல் ஏராளம், இதில்தான் மோடி வென்றிருக்கின்றார்.

ஆம், எஸ்.400 அமைப்பினை ஏற்கனவே சீனா வாங்கி இருக்கின்றது, இனி அது இந்தியாவிடம் இல்லா பட்சத்தில் இங்கு ராணுவ சமநிலை குறையும், சீனாவின் கை ஓங்கா பட்சத்தில் இந்தியாவும் நிற்க அனுமதிக்கும் தேவை அமெரிக்காவிற்கு உண்டு

 

இன்னொன்று சீனாவுடன் வர்த்தக போர் தொடங்கி இருக்கும் நேரத்தில் இந்தியாவினை பகைத்துகொள்வது அமெரிக்காவிற்கு நல்லதல்ல‌ இரு பெரும் நாடுகளை ஒரே நேரத்தில் பகைத்தால் அமெரிக்க வியாபாரமும் படுத்துவிடும்.இதனால் பல்லை கடித்து கொண்டு நிற்கின்றது அமெரிக்கா

 

பழைய அமெரிக்கா என்றால் ஹாய் பாகிஸ்தான் ஹவ் ஆர் யூ" என கட்டிபிடிக்க ஓடும், ஆனால் பாகிஸ்தானை கட்டியழ அவர்களுக்கும் விருப்பமில்லை. கூட்டி கழித்து பார்த்தால் அமெரிக்காவின் நிலையினை கணக்கிட்டு அட்டகாசமாக தன் நலன்களை காத்து கொண்டது இந்தியா.

 

சரியான காலத்தில் மிக சரியான கணக்கு என்பதால் மோடிக்கு வாழ்த்துக்கள். பெட்ரோலுக்கு அதிகவரி கொடுக்கின்றோம் என ஒரு பக்கம் நாம் குறைபட்டு கொண்டாலும், அந்த பணம் இம்மாதிரி நாட்டு பாதுகாப்புக்கும் பயன்படுகின்றது என்பதில் ஆறுதல்

 

எஸ் 400 சிஸ்டத்தின் விலை பல ஆயிரம் கோடி, எத்தனை நாடுகளால் வாங்கமுடியும்? நம்மால் முடிந்திருக்கின்றது.. எப்படியோ முன்பு  காங்கிரஸ் அரசால் ரஷ்யாவிடமிருந்து கிரையோஜெனிக் எஞ்சினை வாங்கமுடியாமல் போனது.

இந்த எஸ 400 என்பதும் அப்படி ஆகிவிடுமோ என தேசம் அஞ்சியது ஆனால் நிர்மலா சீத்தாராமன், அஜித் தோவால், மோடி கூட்டணி மிக தைரியமாக சாதித்திருக்கின்றது.நிர்மலா சீத்தாராமன் ஒரு தமிழர் என்பதால் கூடுதல் வாழ்த்துக்கள், வரலாற்றில் நின்றுவிட்டார் நிர்மலா சீத்தாராமன. சந்தேகமில்லை இது வரலாற்று சாதனை

 

அமெரிக்கா எதிர்ப்பினை மீறி ரஷ்யா சென்று ஒப்பந்தமிட்ட வீரதமிழச்சி அவர்தான். அதன் தொடர்ச்சிதான் புட்டீன் இங்கு வந்திருப்பது.நிச்சயம் உலக அரங்கில் இது இந்தியாவின் மாபெரும் வெற்றி, இந்திய ஊடகமும் பத்திரிகையும் கொண்டாட வேண்டிய வெற்றி.

ஆனால் தமிழக ஊடகம் வழக்கம் போல தூக்கம், சம்பந்தம் இல்லாமல் அப்படி ஒரு விஷயம் நடக்கவே இல்லை என்பது போல் எழுதிகொண்டிருக்கின்றன‌

 

அவைகள் அப்படித்தான்.வலுவான பாரதம் அமையட்டும், பாரினில் நிமிர்ந்து நிற்கட்டும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்

புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம்.