ஸ்டாலினை விட சாடிஸ்ட் வேறு யார் இருக்க முடியும்

ஸ்டாலின் நாக்காக்க வேண்டும். ஸ்டாலினைவிட சாடிஸ்ட் யாரும் இருக்கமுடியாது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தி.மு.க தலைவர் ஸ்டாலினை சாடியுள்ளார் பொன்னார்

பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “ கஜாபுயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களான தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, திருவாரூர் போன்ற மாவட்டங்களில் ஏற்பட்ட அழிவை தமிழக அரசு அதிகாரிகள் ஆய்வுசெய்து உள்ளனர். அதேபோல மத்திய அரசின் குழுவும் ஆய்வுசெய்து உள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட நாளில் இருந்து ஒன்றரை மாதமாக பாரதிய ஜனதா கட்சி மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் நிவாரண பணிகளில் ஈடுப்பட்டார். புயல் பாதிக்கப்பட்ட 6 மணி நேரத்தில் நான்சென்றேன். 3 கட்டமாக சென்று பார்வையிட்டேன். மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர், முன்னாள் தலைவர் உள்பட தலைவர்கள் சென்று பார்த்து பல கோடிக்கணக்கான ரூபாய் நிவாரண உதவிகளை வழங்கி உள்ளோம்.

விவசாய மக்கள், மீனவர்கள் உள்பட பாதிக்கப்பட்ட மக்களின் நிலைகுறித்து டெல்லியில் மத்திய உள்துறை, நிதித்துறை, விவசாயத் துறை, பெட்ரோலிய துறை, நகர்ப்புற மேம்பாட்டுதுறை, வணிகத் துறை அமைச்சர்களை சந்தித்து எந்தந்த துறை முலமாக நிவாரணம் பெறமுடியுமோ அந்தமுயற்சியில் ஈடுப்பட்டு வருகிறோம். மத்திய மந்திரிகள் மனமுவந்து உதவிசெய்வதாக தெரிவித்துள்ளதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய குழு ஆய்வுசெய்து அதற்கான அறிக்கையை இன்னும் சமர்ப்பிக்கவில்லை. அறிக்கையை சமர்ப்பித்தும் அதிகாரிகள் அளவில் கூட்டம் நடக்கும். அதன்பின்னர் தான் எவ்வளவு நிதி ஒதுக்குவது என்பதை நிதித் துறை, உள்துறை, விவசாயதுறை மந்திரிகளின் கூட்டத்தின் பின்தான் முடிவு செய்வார்கள். ஒருகருத்ததை சொல்லும் போது அதற்கு வரவேற்பும் எதிர்ப்பும் இருப்பதை கணக்கில் எடுக்க வேண்டும்.

தி.மு.க தலைவர் ஸ்டாலின் பிரதமர் வேட்பாளரை அறிவிக்கபோவது பற்றி திமுக இரண்டாம் கட்டதலைவர்கள் யாருக்கும் தெரியாது. மேடையில் இருந்த ஆந்திர, கேரள மாநில முதல்வர்கள் வரவேற்க வில்லை. புதுச்சேரி மாநில முதல்வர்தான் கைதட்டினார். ஏன் முன்மொழித்தார்கள் என்று மற்ற எல்லாருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. எந்தந்த கட்சிகள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர இருந்ததோ அந்த கட்சிகள் இதில் உடன்பாடு இல்லை என்று கூறிவிட்டனர். கூட்டி வந்து கழுத்தை அறுத்ததாகதான் பலர் நினைக்கின்றனர். அழைக்கப்பட்டாத ஒருவரை வழிந்து அழைத்து வந்ததின் நோக்கம் என்ன? புலியை பார்த்து பூணை சூடு போட்டதாக கருதுகிறேன். கருணாநிதி சொன்னார் என்றால் அவரது தலைமை எப்படிப்பட்டது என்பது நாடுமுழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்களுக்கு தெரியும்.

கருணா நிதி செய்த விசயங்களை ஒப்பீட்டு நான்செய்ய போவதாக சொன்ன யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. சாடிஸ்ட் என்ற வார்த்தை யாருக்கு பொருந்தும். 1984-ல் இந்திராகாந்தி கொல்லப்பட்ட போது சீக்கிய சகோதரர்களை தேடி கொன்றவர்களை மேடையில் வைத்துக்கொண்டு சாடிஸ்ட் என்று சொல்லாமா?. சாடிஸ்ட் காங்கிரஸ் கட்சிக்கு பொருந்தும். 2 ஆயிரத்துக்கும் அதிகமான கொலைகள் செய்த கொலைக்கார கூட்டத்தை அழைத்து வந்து பெருமைப்படுத் துவதாக நினைத்து சாடிஸ்ட் என்று பேசுகின்றார். ஸ்டாலினை விட சாடிஸ்ட் வேறு யார் இருக்க முடியும். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து நடந்த துயர சம்பவங்களை பேசலாமா. தயவுசெய்து நாக்காக்க வேண்டும். இல்லை என்றால் நீங்களே உங்களை அசிங்கப்படுத்தி கொள்வீர்கள்” இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...