ஸ்டாலினை விட சாடிஸ்ட் வேறு யார் இருக்க முடியும்

ஸ்டாலின் நாக்காக்க வேண்டும். ஸ்டாலினைவிட சாடிஸ்ட் யாரும் இருக்கமுடியாது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தி.மு.க தலைவர் ஸ்டாலினை சாடியுள்ளார் பொன்னார்

பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “ கஜாபுயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களான தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, திருவாரூர் போன்ற மாவட்டங்களில் ஏற்பட்ட அழிவை தமிழக அரசு அதிகாரிகள் ஆய்வுசெய்து உள்ளனர். அதேபோல மத்திய அரசின் குழுவும் ஆய்வுசெய்து உள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட நாளில் இருந்து ஒன்றரை மாதமாக பாரதிய ஜனதா கட்சி மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் நிவாரண பணிகளில் ஈடுப்பட்டார். புயல் பாதிக்கப்பட்ட 6 மணி நேரத்தில் நான்சென்றேன். 3 கட்டமாக சென்று பார்வையிட்டேன். மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர், முன்னாள் தலைவர் உள்பட தலைவர்கள் சென்று பார்த்து பல கோடிக்கணக்கான ரூபாய் நிவாரண உதவிகளை வழங்கி உள்ளோம்.

விவசாய மக்கள், மீனவர்கள் உள்பட பாதிக்கப்பட்ட மக்களின் நிலைகுறித்து டெல்லியில் மத்திய உள்துறை, நிதித்துறை, விவசாயத் துறை, பெட்ரோலிய துறை, நகர்ப்புற மேம்பாட்டுதுறை, வணிகத் துறை அமைச்சர்களை சந்தித்து எந்தந்த துறை முலமாக நிவாரணம் பெறமுடியுமோ அந்தமுயற்சியில் ஈடுப்பட்டு வருகிறோம். மத்திய மந்திரிகள் மனமுவந்து உதவிசெய்வதாக தெரிவித்துள்ளதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய குழு ஆய்வுசெய்து அதற்கான அறிக்கையை இன்னும் சமர்ப்பிக்கவில்லை. அறிக்கையை சமர்ப்பித்தும் அதிகாரிகள் அளவில் கூட்டம் நடக்கும். அதன்பின்னர் தான் எவ்வளவு நிதி ஒதுக்குவது என்பதை நிதித் துறை, உள்துறை, விவசாயதுறை மந்திரிகளின் கூட்டத்தின் பின்தான் முடிவு செய்வார்கள். ஒருகருத்ததை சொல்லும் போது அதற்கு வரவேற்பும் எதிர்ப்பும் இருப்பதை கணக்கில் எடுக்க வேண்டும்.

தி.மு.க தலைவர் ஸ்டாலின் பிரதமர் வேட்பாளரை அறிவிக்கபோவது பற்றி திமுக இரண்டாம் கட்டதலைவர்கள் யாருக்கும் தெரியாது. மேடையில் இருந்த ஆந்திர, கேரள மாநில முதல்வர்கள் வரவேற்க வில்லை. புதுச்சேரி மாநில முதல்வர்தான் கைதட்டினார். ஏன் முன்மொழித்தார்கள் என்று மற்ற எல்லாருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. எந்தந்த கட்சிகள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர இருந்ததோ அந்த கட்சிகள் இதில் உடன்பாடு இல்லை என்று கூறிவிட்டனர். கூட்டி வந்து கழுத்தை அறுத்ததாகதான் பலர் நினைக்கின்றனர். அழைக்கப்பட்டாத ஒருவரை வழிந்து அழைத்து வந்ததின் நோக்கம் என்ன? புலியை பார்த்து பூணை சூடு போட்டதாக கருதுகிறேன். கருணாநிதி சொன்னார் என்றால் அவரது தலைமை எப்படிப்பட்டது என்பது நாடுமுழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்களுக்கு தெரியும்.

கருணா நிதி செய்த விசயங்களை ஒப்பீட்டு நான்செய்ய போவதாக சொன்ன யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. சாடிஸ்ட் என்ற வார்த்தை யாருக்கு பொருந்தும். 1984-ல் இந்திராகாந்தி கொல்லப்பட்ட போது சீக்கிய சகோதரர்களை தேடி கொன்றவர்களை மேடையில் வைத்துக்கொண்டு சாடிஸ்ட் என்று சொல்லாமா?. சாடிஸ்ட் காங்கிரஸ் கட்சிக்கு பொருந்தும். 2 ஆயிரத்துக்கும் அதிகமான கொலைகள் செய்த கொலைக்கார கூட்டத்தை அழைத்து வந்து பெருமைப்படுத் துவதாக நினைத்து சாடிஸ்ட் என்று பேசுகின்றார். ஸ்டாலினை விட சாடிஸ்ட் வேறு யார் இருக்க முடியும். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து நடந்த துயர சம்பவங்களை பேசலாமா. தயவுசெய்து நாக்காக்க வேண்டும். இல்லை என்றால் நீங்களே உங்களை அசிங்கப்படுத்தி கொள்வீர்கள்” இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

மருத்துவ செய்திகள்

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...