ராமநாதபுரம் முன்னேற்றத்திற்கு மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் கொண்டு வரப்படும்

ராமநாதபுரம் மக்களவைத்தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சனிக்கிழமை பரமக்குடி ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரித்தார்.
பரமக்குடி அருகே காலை தனது பிரசாரப்பயணத்தைத் தொடங்கிய அவர், அரியனேந்தல், வெங்கிட்டன் குறிச்சி, பாம்பூர், மேலாய்க்குடி, விளத்தூர், புதுக்குடி, வழிமறிச்சான், பிடாரிசேரி, பார்த்திபனூர், சோமநாதபுரம் ஆகிய கிராமங்களுக்கு சென்று பொதுமக்களிடம் வாக்குகள்சேகரித்தார். அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அவருடன் சென்ற தமிழக தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் எம்.மணிகண்டன், மத்திய, மாநில அரசுகளின்  திட்டங்களை விளக்கிப்பேசினார். மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசும், எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான தமிழக அதிமுக அரசும் தொடர்ந்து மக்களின் நலத்திட்டங்களை நிறைவேற்ற நயினார் நாகேந்திரனுக்கு தாமரை சின்னத்திலும், பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில்  என்.சதர்ன் பிரபாகருக்கு இரட்டை இலை சின்னத்திலும் வாக்களிக்கவேண்டும் என்றார் அமைச்சர்.
பிரசாரத்தின் போது, ராமநாதபுரம் தொகுதி மக்களின் முன்னேற்றத்திற்கு மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் கொண்டு வரப்படும் என பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உறுதிபட தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில� ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர� ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம் ஆபரேஷன் சிந்தூரை பாரட்டி தமிழ்நாடு பாஜக சார்பில் தேசியக்கொடி ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் � ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித் ஷா தமிழகம் ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தே ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை – அண்ணாமலை ''தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அம� ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு ...

மருத்துவ செய்திகள்

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...