ராமநாதபுரம் முன்னேற்றத்திற்கு மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் கொண்டு வரப்படும்

ராமநாதபுரம் மக்களவைத்தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சனிக்கிழமை பரமக்குடி ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரித்தார்.
பரமக்குடி அருகே காலை தனது பிரசாரப்பயணத்தைத் தொடங்கிய அவர், அரியனேந்தல், வெங்கிட்டன் குறிச்சி, பாம்பூர், மேலாய்க்குடி, விளத்தூர், புதுக்குடி, வழிமறிச்சான், பிடாரிசேரி, பார்த்திபனூர், சோமநாதபுரம் ஆகிய கிராமங்களுக்கு சென்று பொதுமக்களிடம் வாக்குகள்சேகரித்தார். அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அவருடன் சென்ற தமிழக தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் எம்.மணிகண்டன், மத்திய, மாநில அரசுகளின்  திட்டங்களை விளக்கிப்பேசினார். மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசும், எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான தமிழக அதிமுக அரசும் தொடர்ந்து மக்களின் நலத்திட்டங்களை நிறைவேற்ற நயினார் நாகேந்திரனுக்கு தாமரை சின்னத்திலும், பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில்  என்.சதர்ன் பிரபாகருக்கு இரட்டை இலை சின்னத்திலும் வாக்களிக்கவேண்டும் என்றார் அமைச்சர்.
பிரசாரத்தின் போது, ராமநாதபுரம் தொகுதி மக்களின் முன்னேற்றத்திற்கு மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் கொண்டு வரப்படும் என பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உறுதிபட தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்க ...

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்களை வரவேற்போம்!! தமிழக மக்களிடம் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான ஆதரவு பல்கி ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தம ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தமிழக அரசு: நயினார் நகேந்திரன் குற்றச்சாட்டு மாம்பழ விவசாயிகள் வயிற்றில் அடிக்காமல், கொள்முதல் விலையை உயர்த்த ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்கா ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்காட்சிக்கு அறுபடை வீடுகளில் இருந்து வந்த வேல் மதுரை, வண்டியூர் டோல் கேட் அருகே ஜூன், 22ல் ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவ ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவை மாறிவருவது ஏன்: நயினார் நாகேந்திரன் கேள்வி கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்? என தமிழக ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள் ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள்விக்குறியானது ஏன்? – நயினார் நாகேந்திரன் கோவை சின்னியம்பாளையத்தில் பிளேக் மாரியம்மன் கோவில் சிலைகளை, மர்ம ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசா ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசாணை: முதல்வருக்கு நயினார் நகேந்திரன் வலியுறுத்தல் 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த காவலர்களுக்கு, சிறப்பு ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...