ராமநாதபுரம் முன்னேற்றத்திற்கு மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் கொண்டு வரப்படும்

ராமநாதபுரம் மக்களவைத்தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சனிக்கிழமை பரமக்குடி ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரித்தார்.
பரமக்குடி அருகே காலை தனது பிரசாரப்பயணத்தைத் தொடங்கிய அவர், அரியனேந்தல், வெங்கிட்டன் குறிச்சி, பாம்பூர், மேலாய்க்குடி, விளத்தூர், புதுக்குடி, வழிமறிச்சான், பிடாரிசேரி, பார்த்திபனூர், சோமநாதபுரம் ஆகிய கிராமங்களுக்கு சென்று பொதுமக்களிடம் வாக்குகள்சேகரித்தார். அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அவருடன் சென்ற தமிழக தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் எம்.மணிகண்டன், மத்திய, மாநில அரசுகளின்  திட்டங்களை விளக்கிப்பேசினார். மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசும், எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான தமிழக அதிமுக அரசும் தொடர்ந்து மக்களின் நலத்திட்டங்களை நிறைவேற்ற நயினார் நாகேந்திரனுக்கு தாமரை சின்னத்திலும், பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில்  என்.சதர்ன் பிரபாகருக்கு இரட்டை இலை சின்னத்திலும் வாக்களிக்கவேண்டும் என்றார் அமைச்சர்.
பிரசாரத்தின் போது, ராமநாதபுரம் தொகுதி மக்களின் முன்னேற்றத்திற்கு மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் கொண்டு வரப்படும் என பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உறுதிபட தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...