பாஜகவை பொருத்தவரை நேரடி அரசியலில்தான்

பாஜகவை பொருத்தவரை நேரடி அரசியலில்தான் இருக்கும், மறைமுக அரசியலில் ஈடுபடாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். தங்க தமிழ்ச்செல்வன் விவகாரத்தில் பதிலளித்தவர் இவ்வாறு கூறினார்.

மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமையான தினகரன்மீது கடுமையான அதிருப்தியில் இருந்துவந்த தங்க.தமிழ்ச்செல்வன், கடந்த சிலநாட்களுக்கு முன்னர் தினகரன் குறித்து கடுமையான சில விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அதனைத்தொடர்ந்து, பிரச்சனை பெரிதாக, அவர் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தங்க தமிழ் செல்வன் விவகாரத்தில், பாஜக அரசியல் லாபம் பார்ப்பதாக கூறப்படுகிறது. அமமுகவில் இருந்து செந்தில்பாலாஜி விலகிய நிலையில், தங்க தமிழ்ச் செல்வனும் அதிரடி முடிவுகளை எடுத்துவருகிறார். அமமுகவை ஆட்டம் காண வைக்க பல்வேறு முயற்சிகள் நடப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்தநிலையில், சென்னை தரமணியில் உள்ள ஐடி நிறுவனத்தில் புதிய உணவகம் திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழிசை சௌந்தரராஜன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ரஜினிகாந்த் முதல் தங்க தமிழ்ச்செல்வன் வரை, யாரையும் பா.ஜ.க. இயக்கவில்லை என்றார். மேலும், அமமுகவிலிருந்து தங்கத் தமிழ்ச்செல்வன் வெளியேறுவதற்கு பாஜக காரணம் அல்ல. தமிழகத்தில் எந்தக்கட்சியில் குழப்பம் நடந்தாலும் அதற்கு பாஜகவை காரணம் கூறுவது வேடிக்கையானது. அதேசமயம், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் திமுக தலைவர் ஸ்டாலின், திமுக ஆட்சியில் மீத்தேன் திட்டபரிசோதனைக்காக கையெழுத்திட்டது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். ஆளும் கட்சியாக இருந்தால் ஒரு நிலைப்பாடு, எதிர்க்கட்சியாக இருந்தால் ஒருநிலைப்பாடா? என்றும் பேசினார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளி ...

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளித்த கோவிலை மீண்டும் கட்டுவோம்-அமித்ஷா உறுதி ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.,வின் தேர்தல் ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பக ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பகுதிகளை மத்திய அமைச்சர் பார்வையிட்டார் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக ...

நீர் சேமிப்பில் மக்களின் பங்கு ...

நீர் சேமிப்பில் மக்களின் பங்கு திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார் குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று 'நீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு' திட்டத்தைத் ...

தேசிய நாலாசிரியர் விருது பெற்ற ...

தேசிய நாலாசிரியர் விருது பெற்ற நல்லாசிரியர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ...

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கல ...

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் பிரதமர் அறிவிப்புக்கு வரவேற்பு முதலாவது திருவள்ளுவர் கலாசார மையம் சிங்கப்பூரில் அமைக்கப்படும் என்று ...

பெண்கள் முன்னேற்றத்திற்கான தட ...

பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகள் அகற்றம் – நிர்மலா சீதாராமன் பெருமிதம் ''பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகளை, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., ...

மருத்துவ செய்திகள்

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...