முருங்கையின் மருத்துவக் குணம்

 மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

முருங்கைக் கீரையை உணவாகக் கொள்ள கபம்,பித்த மயக்கம், கண்நோய், செரியா மாந்தம் தீரும்.

முருங்கைப் பூவைப் பருப்புடன் சமைத்துண்ணக் கண் எரிச்சல், வாய்நீர் ஊறல், வாய்க் கசப்பு மாறி குணம் உண்டாகும்.

 

இது முருங்கை மரத்தின் இலை. முருங்கைக் கீரை தாது புஷ்டி தருகிற கீரைகளில் ஒன்று. இரத்தத்திற்கும் உரம் அளிக்கிற உயிர்ச்சத்தும், எலும்புக்கு உரம் அளிக்கும் கால்ஷியம் என்னும் பொருளும் இதில் உண்டு. இந்தக் கீரையைச் சமைக்கும்போது இதனுடன் அரிசிமாவைத் தூவுவது பண்டைக்காலத்து வழக்கம்.

 

முருங்கைக்காயை அளவுடன் சாப்பிட்டுவர மார்புச்சளி, கபக்கட்டு நீங்கிக் குணம் உண்டாகும்.

முருங்கைக் கீரையை மூன்று கைப்பிடியளவு எடுத்து சட்டியிலிட்டு கருக்கி வர வெடித்துக் கருகி நெருப்புப்பற்றி எரிந்து உப்புக் கிடைக்கும் இதைத்தூள் செய்துப் பொடித்து பத்திரப்படுத்தி அரைத்தேக்கரண்டி வாயில்போட்டு வெந்நீர் குடித்துவர புளியேப்பம் மாறி பசியுண்டாகும்.

முருங்கை இலைச்சாறு அரைச்சங்களவு எடுத்து அதில் பட்டாணி அளவு உப்புப்போட்டு ஒருமுறை கொடுக்க வயிற்று உப்பிசம் தணிந்து குணமாகும்.

கவனமாக புழுநீக்கி எடுத்த முருங்கைப் பூவுடன் சமனளவு துவரம் பருப்பு சேர்த்து பகல் சாதத்துடன் சாப்பிட்டுவர உடல் பலமுண்டாகும். தினசரி 21 நாட்கள் சாப்பிட வேண்டும்.

விதை பிடிக்காத இளம் முருங்கை காய்களை உமிக் கருக்கில் சுட்டு நெகிழச் செய்து இடித்து சாறுபிழிந்து காய்ச்சிய பசும்பாலுடன் காலையில் மட்டும் சாப்பிட்டுவர தாது பலம் உண்டாகும். இதை 21 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.

நன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்
டாக்டர். மு. போத்தியப்பன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...