இஞ்சியின் மருத்துவ குணங்கள்

 வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, அரைத் தேக்கரண்டி மிளகு, அதே அளவு சீரகம் இரண்டையும் நைத்து இத்துடன் இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வைத்து, இறக்கி ஆறிய பின் வடிகட்டி வைத்துக் கொண்டு, இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை ஒரு சங்களவு குடித்து வந்தால் வயிற்றுப் பெருமல் அடங்கும். வயிற்று வலி குணமாகும்.

3௦ கிராம் இஞ்சியை வாங்கி வந்து, அதன் தோலை சீவிக் கழுவி விட்டு, சுண்டைக்காயளவு பருமனாக நறுக்கி ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு, ஒரு எலுமிச்சைப் பழத்தை பிழிந்து இதில் விட்டு, 5 கிராம் இந்துப்புத் தூள் சேர்த்து நன்றாகக் கிளறி வெயிலில் வைக்க வேண்டும். உலர உலர சாற்றில் போட்டு எடுத்து, இஞ்சித்துண்டுகளை உலர்ந்த பின் அதே சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு, தினசரி காலை, மாலை தேக்கரண்டியளவு துண்டுகளை எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி விட்டுச் சிறிதளவு வெந்நீர் குடிக்க வேண்டும். இந்த விதமாக ஏழு நாட்கள் சாப்பிட்டால் போதும். பித்தக் கோளாறு அத்தனையும் குணமாகும்.

இருதய பலவீனம், இருதயத்தில் வலி, இருதயப் படபடப்பு போன்ற கோளாறுகளைப் போக்க, 1௦ கிராம் இஞ்சியைக் கழுவி, அம்மியில் வைத்து நைத்துச் சாறு எடுத்து ஒரு பாத்திரத்தில் விட்டு வைத்தால் அதிலுள்ள சுண்ணாம்பு வண்டல் அடியில் தங்கிவிடும். மேலே தெளிந்த நீர் நிற்கும். இந்த நீரை மட்டும் வடிகட்டி, அத்துடன் இரண்டு தேக்கரண்டி தேனும் சேர்த்துக் கலக்கி காலையில் வெறும் வயிற்றில் குடித்து விடவேண்டும். இந்த விதமாக ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால் இருதயம் பலம் பெரும். இருதய சம்மந்தமான கோளாறுகள் நீங்கும்.

வறட்டு இருமலாக இருந்தாலும், ஜலதோஷம் காரணமாக இருமல் ஏற்பட்டிருந்தாலும் அதை குணப்படுத இஞ்சியை தட்டிச் சாறு எடுத்து ஒரு சிறிய பாத்திரத்தில் வைத்திருந்தால் சுண்ணாம்பு அடியில் தங்கி, மேலாகத் தெளிவு நீர் நிற்கும். தெளிந்த நீரை மட்டும் எடுத்து அதில் ஒரு தேக்கரண்டியளவும், மாதுளம் பழத்தை இரண்டாக நறுக்கி உரலில் போட்டு இடித்துச் சாறு எடுத்து அதில் ஒரு தேக்கரண்டியளவும், ஒரு தேக்கரண்டியளவு தேனும் சேர்த்து, கலக்கி காலை, மாலையாக இரண்டு வேளை சாப்பிட்டால் இருமல் குணமாகும். குழந்தைகளுக்கு பாதியளவு கொடுக்க வேண்டும்.

இஞ்சி 5 கிராம், சீரகம் அரைத் தேக்கரண்டியளவு எடுத்து, அதை அப்படியே வைத்திருந்தால் மேலே தெளிந்த நீரும், அடியில் சுண்ணாம்பு வண்டலும் தேங்கி நிற்கும். மேலே உள்ள நீரை மட்டும் இறுத்தி மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை சங்களவு குடித்து வந்தால் அஜீரணம் புளியேப்பம் நீங்கும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணி ...

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் என மத்திய அமைச்சர் ...

ஜனநாயகத்தின் தாயாகம் இந்தியா

ஜனநாயகத்தின் தாயாகம்  இந்தியா இந்தியா, ஜனநாயகத்தின் தாயாக உள்ளதாகவும், பலசவால்களுக்கு மத்தியில் அதிவேகமாக ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற் ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது எல்விஎம் 3 - எம் 3 ராக்கெட் மூலம் ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 லிருந்து 140 ஆக உயர்வு தில்லி-தரம்சாலா-தில்லி இடையிலான முதலாவது இண்டிகோ விமானத்தை மத்திய தகவல் ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்த ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்திற்கான பிராணவாயு எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் உங்களை மீண்டும் ...

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

மருத்துவ செய்திகள்

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...