இந்தியா மீண்டும் ஒரு நாள் உலக நாடுகளின் தலைமையாக உருவாகும்

ஜார்க்கண்ட் மாநிலம், சிம்டேகா மாவட்டத்தில் ராமரேகை கோயில் உள்ளது. ராமர், சீதை, லட்சுமணன் ஆகிய மூவரும் 14 ஆண்டுகள் வனவாசம் சென்ற போது, ராம ரேகை என்ற இடத்தில் சிலநாள்கள் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. அங்குள்ள குகையில் ராமர் உள்ளிட்ட தெய்வங்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்தக்கோயிலில் வழிபடுவதற்காக மோகன் பாகவத், புதன் கிழமை சிம்தேகா மாவட்டத்துக்கு வருகைதந்தார். பின்னர், விசுவ ஹிந்து பரிஷத், ஹிந்து தர்ம ரக்ஷா சமிதி, தாம் விகாஸ் சமிதி ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றினார்.

அவர் பேசியதாவது:புனிதத்தலங்களின் பெருமை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த தலங்களுக்குச் சென்று வழிபடுவதை அதிருஷ்டமாகக் கருதுகிறேன்.
சனாதன தர்மத்தை பின்பற்றுவோர் மட்டுமே ஹிந்துக்கள் என்ற தவறானகருத்து நிலவுகிறது. சனதான தர்மம் உண்மையை அடிப்படையாக கொண்டது. எனவே, இதை நீங்கள் மனதில்நிறுத்தி அச்சமின்றி இறைச்சேவை புரிய வேண்டும்.

இந்தியா ஒருதேசம்; இதில், ஜாதி, மத ரீதியில் பாகுபாடுகிடையாது என்று நமது அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. நான் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவன், நீங்கள் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

ஆனால், நாம் அனைவரும் இந்தியர்கள். உலகம், நம்மை அப்படித் தான் அழைக்கிறது. மக்கள் ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்றே சனாதன தர்மம் கற்பிக்கிறது. இந்தியா மீண்டும் ஒரு நாள் உலக நாடுகளின் தலைமையாகமாறும் என்றார் மோகன் பாகவத்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.