சர்ச்சசையை கிளப்பும் தலைவர்கள் – மோகன் பகவத்

”அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்ட பின், பல்வேறு இடங்களிலும் இதே போன்ற பிரச்னையை கிளப்பி, ஹிந்துக்களின் தலைவர்களாக மாற சிலர் நினைக்கின்றனர்; இதை ஏற்றுக்கொள்ள முடியாது,” என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தின் மதுரா, சம்பல் உட்பட பல்வேறு இடங்களில் மசூதி உள்ள இடத்தில் ஒரு காலத்தில் ஹிந்து கோவில் இருந்ததாகவும், அதை அகற்றிவிட்டு கோவில் கட்ட வலியுறுத்தியும் நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த மசூதிகளில் தொல்லியல் துறை ஆய்வுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலவரங்கள் நடந்தன. இதை நேரடியாக குறிப்பிடாமல், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

மஹாராஷ்டிராவின் புனேவில், ஹிந்து சேவை அமைப்பு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் மோகன் பகவத் பேசியதாவது:

ராமகிருஷ்ண மடத்திலும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. நம்மால் மட்டுமே இதை செய்ய முடியும். காரணம், நாம் ஹிந்துக்கள்.

நாம் காலங்காலமாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். இந்த நல்லிணக்கத்தை உலகிற்கு வழங்க வேண்டுமானால், அதற்கான முன்மாதிரியை நாம் உருவாக்க வேண்டும். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்ட பின், அதே போன்ற பிரச்னையை பல்வேறு இடங்களிலும் எழுப்பி, ஹிந்துக்களின் தலைவர்கள் ஆகலாம் என சிலர் நினைக்கின்றனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ராமர் கோவில் அனைத்து ஹிந்துக்களின் நம்பிக்கையாக இருந்ததால் அது கட்டப்பட்டது. ஆனால், ஒவ்வொரு நாளும் இதே போன்ற பிரச்னைகள் கிளப்பப்படுகின்றன.இதை எப்படி அனுமதிக்க முடியும்? இதை தொடர விடக்கூடாது. நாம் ஒன்றாக சேர்ந்து வாழ முடியும் என்பதை உணர்த்த வேண்டும். இன்றைக்கு நம் நாடு அரசியலமைப்பு சட்டப்படி இயங்குகிறது. யார் அரசு நடத்த வேண்டும் என்பதை மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர். மேலாதிக்க காலமெல்லாம் முடிந்துவிட்டது.

ஹிந்துக்கள் வசம் ராமர் கோவில் ஒப்படைக்கப்பட வேண்டுமென்று பல ஆண்டுகளுக்கு முன்னரே முடிவு செய்யப்பட்டது. இதை மோப்பம் பிடித்த ஆங்கிலேயர், இரு சமூகத்தினருக்கு இடையே பிளவை ஏற்படுத்தினர். அதன் பின் தான் பிரிவினை என்ற சிந்தனை தோன்றி, பாகிஸ்தான் என்ற நாடு உருவானது.

இங்கு யாரும் சிறுபான்மையினர் இல்லை; பெரும்பான்மையினரும் இல்லை; அனைவரும் சமம். அனைவரும் தங்கள் விருப்பப்படி வழிபாட்டு முறையை பின்பற்றலாம் என்பதே நம் பாரம்பரியம். விதிகள் மற்றும் சட்டங்களுக்கு கட்டுப்பட்டு இணக்கமாக வாழ்வது மட்டுமே தேவை.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரியணை என்பது அறிவாலயத்திற்கு � ...

அரியணை என்பது அறிவாலயத்திற்கு எட்டாக்கனியாக மாறும்; நயினார் நாகேந்திரன் ''வரும் 2026ல் தமிழக மக்கள் கொடுக்கப் போகும் ...

ஆதாரமற்ற விஷ வதந்தி பரப்புவோர் ...

ஆதாரமற்ற விஷ வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க போராட்டம் – நயினார் நாகேந்திரன் 'ராணுவத்தின் மீதும், தேச பாதுகாப்பின் மீதும், ஆதாரமற்ற விஷ ...

தமிழக மீனவர்கள் நலன்களுக்காக ஆ� ...

தமிழக மீனவர்கள் நலன்களுக்காக ஆந்திராவில் ஒலித்த குரல்: பேச்சு நடத்த பவன் கல்யாண் வலியுறுத்தல் தமிழக மீனவர்கள் தாக்குதல் தொடர்பாக இந்தியா, இலங்கை பேசசுவார்த்தை ...

பயங்கரவாதத்திற்கு எதிரான போரா� ...

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவு: மோடியிடம் ரஷ்ய அதிபர் புடின் உறுதி பிரதமர்மோடியுடனானதொலைபேசி உரையாடலில் பயங்கரவாதத்திற்குஎதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவு ...

பாதுகாப்பு துறை செயலருடன் பிரத� ...

பாதுகாப்பு துறை செயலருடன் பிரதமர் மோடி ஆலோசனை இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் ...

இந்தியாவிற்கு தேவை கூட்டாளிகள� ...

இந்தியாவிற்கு தேவை கூட்டாளிகள் – ஜெய்சங்கர் ''இந்தியா உடன் ஆழமான உறவை பேணுவதற்கான தங்கள் விருப்பத்தையும், ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...