குலாம் நபி ஆசாத்தின் கருத்து துரதிருஷ்ட வசமானது

தேசியபாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவலை விமர்சித்த குலாம் நபி ஆசாத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது!

கடந்த செவ்வாய் அன்று தேசியபாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டத்துக்கு சென்று, காஷ்மீரின் நிலைகுறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது நடைபாதையில் மக்களுடன் சேர்ந்து அவர் உணவுசாப்பிடுவதும், அவர்களுடன் உரையாடுவதும் புகைப் படங்களாகவும், வீடியோவாகவும் வெளியாகி ‘வைரல்’ ஆனது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்திடம் கேட்ட போது, “பணத்தால் யாரை வேண்டுமானாலும் வாங்கலாம்” என்று கூறினார்.

அவரது கருத்துக்கு பாஜக தலைவர்கள் மத்தியில் அதிர்ப்தியை ஏற்படுத்தியது. கட்சி உறுப்பினர்கள் கடும்கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் உசேன் தெரிவிக்கையில்.,

குலாம் நபி ஆசாத்தின் கருத்து துரதிருஷ்ட வசமானது. நான் வன்மையாக கண்டிக்கிறேன். பாகிஸ்தானிடம் இருந்துதான் இத்தகைய குற்றச் சாட்டுகளை எதிர்பார்க்க முடியும். ஆனால், காங்கிரஸ் போன்ற பெரிய அரசியல் கட்சியிடம் இருந்து இதை நாங்கள் எதிர்பார்க்க வில்லை. இந்த குற்றச்சாட்டை சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் பயன்படுத்த வாய்ப்புள்ளது. ஆகவே, ஆசாத் உடனடியாக மன்னிப்புகேட்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

பாஜக பொதுச்செயலாளர் ராம் மாதவ், செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சம்பித் பத்ரா தெரிவிக்கையில்., “இந்தியாவில் நல்ல விஷயங்கள் நடக்கும் போதெல்லாம், பாகிஸ்தானும், காங்கிரஸ் கட்சியும் ஒரேகுரலை எதிரொலிக்கின்றன. ஒன்று பாகிஸ்தான் காங்கிரஸ் குரலை எதிரொலிக்கும், அல்லது காங்கிரஸ் பாகிஸ்தான்குரலை எதிரொலிக்கும். தற்போது இதுதான் நடந்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...