எழுதிக்கொடுப்பதை அப்படியே பேசுகிறார் ராகுல் – ஜே.பி. நட்டா

எழுதி கொடுப்பவர்கள் எதை எழுதி கொடுத்தாலும், காங்கிரஸ் கட்சி எம்.பி., ராகுல் அப்படியே அதனை படித்து வருவதாக மத்திய அமைச்சரும், பா.ஜ., தேசிய தலைவருமான ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

நாட்டில் பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., மட்டுமல்லாமல் இந்திய அரசையே எதிர்த்து போராடி வருவதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இவரது இந்தப் பேச்சுக்கு பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், ராகுல் பேச்சு குறித்து மத்திய அமைச்சரும், பா.ஜ., தேசிய தலைவருமான ஜே.பி.நட்டா கருத்து தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இந்திய அரசுக்கு எதிராக போராடி வருவதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர். அவர்களுக்கு வரலாறு ஏதும் தெரியாது. எழுதி கொடுப்பவர்கள் எதை எழுதி கொடுத்தாலும், அதனை எங்கு வேண்டுமானாலும் ராகுல் பேசி வருகிறார் என்பதை நான் பலமுறை சொல்லியுள்ளேன்.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு, சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏ-வை ரத்து செய்தது. முன்பு ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்பின் படி பதவி பிரமாணங்கள் செய்யப்பட்டன. தற்போது, முதல்முறையாக இந்திய அரசியலமைப்பின்படி பதவி பிரமாணங்கள் நடக்கின்றன. அதேபோல, எஸ்.சி., எஸ்.டி., சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் சட்டசபை தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கிறது, என்று பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

மருத்துவ செய்திகள்

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...