பாஜக.,வின் இளம் ஊழியர்களுக்கு மிகச் சிறந்த முன்னுதாரணம் சுஷ்மா

மறைந்த மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் நினைவாக டெல்லியில் இன்று நடந்த இரங்கல் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசியதாவது, “சுஷ்மா சுவராஜ் தனக்கு கொடுக்கப்பட்ட அனைத்து பணிகளிலும் தன்னால் முடிந்தளவிற்கு சிறப்பாக செயல்பட்டார். தனது தனிப்பட்ட வாழ்விலும் நிறையசாதித்துள்ள அவர் பாரதீய ஜனதா கட்சியில் இருக்கும் இளம் ஊழியர்களுக்கு மிகச் சிறந்த முன்னுதாரணமாவார்.

சுஷ்மா ஸ்வராஜ் தனது சொந்தவாழ்க்கையில் நிறைய சாதித்த போதிலும், எந்த பணியைக் கொடுத்தாலும் அதற்கு தன்னையை அர்ப்பணிப்பார். பாஜக இளம்தொண்டர்களுக்கு அவரைக் காட்டிலும் பெரிய உத்வேகம் இருக்கமுடியாது. வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களின் பிரச்னைகளை தனது சொந்தப் பிரச்னைகளாக நினைத்துக் கொள்வார். வெளியுறவு அமைச்சகத்தின் குணத்தையே அவர் முற்றிலுமாக மாற்றினார். கடந்த 70 ஆண்டுகளில் நாட்டில் 77 பாஸ்போர்ட் அலுவலகங்கள் இருந்தது. அவர் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த 5 ஆண்டுகளில், தற்போது இந்தியாவில் 505 பாஸ்போர்ட் அலுவலகங்கள் உள்ளது. இதிலிருந்தே அவரதுபணியின் வீரியத்தை நாம் உணரலாம்.

ஐ.நா சபையில் நான் எனது முதல்உரையை நிகழ்த்துவதற்குத் தயாராக இருந்தேன். அவர், என்னுடைய உரை எங்கே என்றுகேட்டார். நான் எழுதிக்கொள்ளாமலே உரையாற்றுவேன் என்று அவரிடம் தெரிவித்தேன். ஆனால், அவர் அதை கடுமையாக எதிர்த்தார். இதையடுத்து, அவருடன் இணைந்து முந்தைய நாள் இரவு உரையைத் தயார்செய்தோம்.

பின்னர் அவர் என்னிடம் தெரிவித்தார், நீங்கள் எவ்வளவு பெரியபேச்சாளராக வேண்டுமானாலும் இருக்கலாம், அவைகளுக்கு என்று ஒரு சில நல்லொழுக்கங்கள் உள்ளது. அதற்கான பயிற்சிகள் மிகமுக்கியம் என்றார். அவரிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட முதல் பாடம் இது”

பாஜகவின் மூத்த தலைவரும் மத்தியவெளியுறவு முன்னாள் அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் கடந்த 6-ஆம் தேதி உயிரிழந்தார். அவருடைய மறைவையொட்டி தில்லியில் இரங்கல்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது,

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள ...

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதை அரசு உறுதி செய்கிறது'' ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் & ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் – மத்திய அரசின் முடிவை அமல்படுத்திய டில்லி பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய ...

இந்திய ராணுவம் பதிலடி

இந்திய ராணுவம் பதிலடி காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தாண்டி, அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வ ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வேண்டும் ''பஹல்காமில் பயங்கரவாதிகள் எந்த பயமும் இல்லாமல் அப்பாவி மக்களை ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர்கள் சத்தீஸ்கர் - தெலுங்கானா - மஹாராஷ்டிரா எல்லையில், நக்சல்களுக்கு ...

மருத்துவ செய்திகள்

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...