பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டும் தான் இனி பேச்சு

பாகிஸ்தான் அரசு, ஜம்மூ காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்டது குறித்து தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து, சர்வதேசளவில் இந்திய மீது அழுத்தம் கொடுக்க முயன்று வருகிறது. இதற்கு பதிலடிகொடுக்கும் வகையில் இந்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், “பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவேண்டும். அதில் ஜம்மூ காஷ்மீர் குறித்து பேசப்படாது. மாறாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டும் தான் பேசப்படும்” என்று கூறியுள்ளார்.

ஹரியானாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராஜ்நாத் சிங் , “பாகிஸ்தான் அரசு, தீவிரவாதிகளுக்குப் புகலிடம் அளித்துவருவதை நிறுத்தினால்தான், பேச்சுவார்த்தை நடக்கும்.

முன்னதாக பாகிஸ்தான், சீனாவின் உதவியோடு ஐ.நா சபையில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பியது.

சட்டப்பிரிவு 370 குறித்து நடவடிக்கை எடுத்தால், அதுதேசத்தை இரண்டாக்கும் என்று பலர் கருதினார்கள். அதில் கைவைத்தால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரவே வராது என்றும் கூறினார்கள். பாஜக-வுக்கு வாக்குவங்கி அரசியலைப் பற்றித் துளியும் கவலைஇல்லை. தேச ஒற்றுமையை முன்னிருத்தும் அரசியலைத்தான் நாங்கள் செய்வோம்” என்று உரையாற்றினார்.

அந்த ஆலோசனை கூட்டத்தில் பாகிஸ்தான் நினைத்ததுபோல் எதுவும் நடக்கவில்லை. கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பான்மை நாடுகள், ‘காஷ்மீர் விவகாரம்குறித்து பாகிஸ்தானும் இந்தியாவும் மட்டும் தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’ என்று தெரிவித்து விட்டன. எந்தவித தீர்மானமும் நிறைவேற்றப்படாமலேயே அந்த கூட்டம் முடிவடைந்தது. இது பாகிஸ்தானுக்கு மிகப்பெரும் பின்னடைவாக பார்க்கப் படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் மீது மேலும் அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் ராணுவத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...