பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டும் தான் இனி பேச்சு

பாகிஸ்தான் அரசு, ஜம்மூ காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்டது குறித்து தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து, சர்வதேசளவில் இந்திய மீது அழுத்தம் கொடுக்க முயன்று வருகிறது. இதற்கு பதிலடிகொடுக்கும் வகையில் இந்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், “பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவேண்டும். அதில் ஜம்மூ காஷ்மீர் குறித்து பேசப்படாது. மாறாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டும் தான் பேசப்படும்” என்று கூறியுள்ளார்.

ஹரியானாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராஜ்நாத் சிங் , “பாகிஸ்தான் அரசு, தீவிரவாதிகளுக்குப் புகலிடம் அளித்துவருவதை நிறுத்தினால்தான், பேச்சுவார்த்தை நடக்கும்.

முன்னதாக பாகிஸ்தான், சீனாவின் உதவியோடு ஐ.நா சபையில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பியது.

சட்டப்பிரிவு 370 குறித்து நடவடிக்கை எடுத்தால், அதுதேசத்தை இரண்டாக்கும் என்று பலர் கருதினார்கள். அதில் கைவைத்தால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரவே வராது என்றும் கூறினார்கள். பாஜக-வுக்கு வாக்குவங்கி அரசியலைப் பற்றித் துளியும் கவலைஇல்லை. தேச ஒற்றுமையை முன்னிருத்தும் அரசியலைத்தான் நாங்கள் செய்வோம்” என்று உரையாற்றினார்.

அந்த ஆலோசனை கூட்டத்தில் பாகிஸ்தான் நினைத்ததுபோல் எதுவும் நடக்கவில்லை. கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பான்மை நாடுகள், ‘காஷ்மீர் விவகாரம்குறித்து பாகிஸ்தானும் இந்தியாவும் மட்டும் தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’ என்று தெரிவித்து விட்டன. எந்தவித தீர்மானமும் நிறைவேற்றப்படாமலேயே அந்த கூட்டம் முடிவடைந்தது. இது பாகிஸ்தானுக்கு மிகப்பெரும் பின்னடைவாக பார்க்கப் படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் மீது மேலும் அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் ராணுவத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...