உலகின் வலிமையான தலைவராக மோடி திகழ்கிறார்

காஷ்மீரின்  சிறப்பு அந்தஸ்த்தை ரத்துசெய்து அதை இந்தியாவுடன் இணைத்தது மட்டுமல்லாமல், இந்திய இறையாண்மையில் மூன்றாம்  நாடுகள் தலையிடுவதை இந்தியா விரும்பவில்லை என கூறியதன் மூலம் உலகில் வலிமைமிக்க தலைவராக பிரதமர் மோடி திகழ்கிறார் என இங்கிலாந்து நாட்டின், நாடாளுமன்ற உறுப்பினர் பாரட்டியுள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் தலையிட பாகிஸ்தானுக்கு எந்தஉரிமையும் இல்லை என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

 

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தான் சீனா ஆகிய இரு நாடுகளும் இந்தியாவை பகிரங்கமாக எதிர்த்துவருகின்றன,  காஷ்மீரில் இந்தியா மனித உரிமை மீறலில் ஈடுபட்டுவருவதகவும்  ஐநா மனித உரிமை மன்றத்தில் பாகிஸ்தான் இந்தியாமீது புகார் அளித்து, அதற்கான விசாரணை விரைவில் நடைபெற உள்ளது. இந் நிலையில் இங்கிலாந்தில் வசிக்கும் காஷ்மீர் பண்டிட்டுகள் சார்பில் தியாகிகள்தினம் அனுசரிக்கப்பட்டது. அதில் இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் பிளாக்மேன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,  காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா எடுத்துள்ள நடவடிக்கையா பாரட்டுகிறேன்.

 

இந்தியா சுதந்திரம் அடைந்த  ஒருசில ஆண்டுகள் முதல்  காஷ்மீர் இந்தியாவின் அங்கமாக இருந்து  வருகிறது, அப்படியிருக்கையில் அதில் சிலமாற்றங்களை கொண்டு வருவதற்கு இந்தியாவிற்கு முழு உரிமை உள்ளது. அதை விமர்சிக்கவோ. எதிர்க்கவோ, அதில்  தலையிடவோ பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் இல்லை என்றார். ஆக்கிரமிப்பு காஷ்மீர்பகுதியில் இருந்து பாகிஸ்தான் தன்னுடைய ராணுவத்தை உடனே வெளியேற்றுவதுடன், முற்றிலுமாக காஷ்மீரை விட்டு வெளியேறவேண்டும் என்றார். சீனா பாகிஸ்தான், உள்ளிட்ட நாடுகள் எதிர்த்தபோதும் தன் முடிவில் உறுதியாக இருந்து இந்திய விவகாரங்களில் யாரும் தலையிடமுடியாது என்று எச்சரித்ததன் மூலம் உலகின் வலிமையான தலைவராக மோடி திகழ்கிறார் என அவர் பாராட்டினார்.

 

இந்தியாவின் முடிவை தீவிரமான ஆதரிக்கிறேன் என்றும்,  ஐநா மன்றத்தில் இங்கிலாந்து இந்தியாவை ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்துவேன் என்றும் அப்போது அவர் கூறினார். இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்து பாகிஸ்தானுக்கு எரிச்சலை ஏற்படுத்தினாலும் கூடவே கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...