எதிரியாகவே இருக்க வேண்டும் என்றில்லையே?

மாமல்லபுரத்தில் இந்தியா, சீனா ஆட்சியாளர்கள் மத்தியிலான அதிகார பூர்வமற்ற 3 நாள் தொடர் பேச்சுவார்த்தை தமிழகத்துக்கு பெருமை, பிரதமர் நரேந்திர மோடியின் ராஜ தந்திரத்துக்கு பெரும் வெற்றி, ஆம் தொடங்குவதற்கு முன்பே பெரும் வெற்றி என்றுதான் கூறவேண்டும்.

இந்தியா சீனா தொடர்பு  பல்லாயிரம் ஆண்டுகளை கடந்தது. பேரரசர் வான் (கி.மு 140 – 86) காலமாகட்டும்,  கி.பி. 6-ம் நூற்றாண்டு தொடங்கி, 13-ம் நூற்றாண்டு வரை காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பல்லவர்கள் காலமாகட்டும் நீண்ட நெடியது. முத்து, பவளம், பட்டு வணிகம் பல நூற்றாண்டுகள் செழித்தோங்கியது. சீன வரலாற்று ஆசிரியர் மா-டவான் லி , சீன பயணி யுவன் சுவாங், மற்றும் மாமல்ல புறத்தின் குறிப்புகளில் இருந்து இதை நாம் அறியலாம்.

இந்தியாவில் பிறந்த புத்தம் சீனாவில் செழித்தோங்கியது, தமிழகத்தில் பிறந்த பல்லவ அரச வம்சத்தை சேர்ந்த போதிதர்மன் அதை அங்கு மேலும் வேறூன்ற செய்தான். எனவே பாரதத்தின் பண்பாடும், கலாச்சாரமும் அவர்களுக்கு வெறுக்க தக்கதல்லவே. இந்திய, சீனா வெறுப்பு அரசியல் என்பது வெறும் 70வது வருடத்தையதே. இரு நாடுகளிடையேயான 1962 போரும், பாக்கிஸ்தான் மீதான கண்மூடி தனமான ஆதரவுமே வெறுப்பை தீவிரமாக விதைத்தது. அதுவும் காங்கிரஸ் அரசுகளின் ராஜதந்திர தோல்வியும், திறமையின்மையுமே இதை உயிர்ப்புடன் வைத்திருந்தது.

தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் நேர்மறையான அணுகு முறையும், தேவைப்படும் இடங்களில் கடும் பதிலடியும்,   பரஸ்பர நம்பத்தன்மையும், ராஜதந்திர வியூகமும் பலனளிக்க தொடங்கியுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு சிக்கிமின் டோக்லாமில் இந்திய, சீன ராணுவம் நேருக்கு நேர் மல்லுக்கட்டின, இந்திய பின்வாங்க வேண்டும், வீண் வம்பை சீனாவிடம் விலைக்கொடுத்து வாங்கிக்கட்டிக்க வேண்டாம் என்றது இங்குள்ள பெரும்பாலான ஊடகங்களும், எதிர் காட்சிகலும். ஆனால் 73 நாள் மல்லுக்கட்டு சீனாவின் வாகன்  நகரில் இரு நாடுகளிடையேயான முதல்  முறைசாரா சந்திப்புக்கு பின் முற்றுப் பெற்றது. . சீனா பின்வாங்கி கொண்டது. இது முதல் வெற்றி.

தற்போது 2வது முறைசாரா சந்திப்பு தொடங்குவதற்கு முன்பே வெற்றியை எட்டிவிட்டது. காஸ்மீரின் 370 சிறப்பு சட்டத்தை இந்திய ரத்து செய்த பொழுது அதை கடுமையாக எதிர்த்த சீனா, பாகிஸ்தானுடன் இனைந்து மூன்றாம் உலக நாடுகளின் தலையீட்டினை வலியுறுத்திய சீன, ஐயக்கிய நாடுகளின் பொதுச்சபையின் தலையீட்டை வலியுறுத்திய சீனா, தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஐநாவின் பூட்டிய அறையினுள் விவாதம் நடத்திய சீனா, இன்று இந்த விஷயத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் மட்டுமே பேசி தீர்வு காண வேண்டும் என்று கூறிவிட்டு  பின் வாங்கியுள்ளது.

இது மாபெரும் வெற்றிதானே, இந்தியாவும் சீனாவும் இனி வரும் காலங்களிலும் எதிரியாகவே இருக்க வேண்டும் என்ற விதியொன்றும் இல்லையே!.

நன்றி தமிழ்த்தாமரை VM வெங்கடேஷ் 

One response to “எதிரியாகவே இருக்க வேண்டும் என்றில்லையே?”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

மருத்துவ செய்திகள்

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...