தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை தேர்தல்ஆணையம் டிசம்பர் 2ஆம் தேதி அறிவிக்க வாய்ப்புண்டு என்று கூறுகின்றனர். இதனால் ஆளுங்கட்சியான அதிமுக சார்பாக, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவிரும்பும் கட்சி உறுப்பினர்கள் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது. தற்போது, எதிர்க்கட்சியான திமுக.,வும் தங்களது தொண்டர்களுக்கு விருப்பமனு தாக்கல் செய்ய அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் கூட்டணி கட்சிகள் மேயர் பதவிகேட்டு அதிமுக தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. இதில் பாஜக, பாமக, தேமுதிக கட்சியினர் மேயர் பதவி வேண்டும் என்று கூறுவதாக சொல்லப்படுகிறது.
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |