செலவுகளைக் குறைக்க மத்திய அரசு முடிவு

தண்ட செலவுகளைக் குறைக்க மத்தியஅரசு முடிவெடுத்துள்ளதாம். அதவது கிட்டத்தட்ட 20 சதவீத அளவுக்கு வீண்செலவுகளைக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவு ஒன்று அனைத்து மத்திய அமைச்சர்களுக்கும் போயுள்ளதாம்.

சுற்றுப் பயணம், உணவு, ஆலோசனைக் கூட்டங்கள் உள்ளிட்டவற்றுக்காக செலவு செய்யும் தொகையில் 20 சதவீதத்தைக் குறைக்கவேண்டும் என்று உத்தரவிடப் பட்டுள்ளதாம். இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய செலவுத் துறை, நிதித்துறைக்கும் உத்தரவு போயுள்ளதாம்.

இந்த செலவுக்குறைப்பு தொடர்பான முடிவு, சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த முதலீடு மற்றும் வளர்ச்சிக்கான அமைச்சரவைக் குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்டு அமைச்சர்களுக்கு உத்தரவுகள் போயுள்ளன.

அத்தியாவசியமே இல்லாத செலவுகளுக்குத்தான் முதலில் ஆப்பு வைக்கப்படுகிறது. இதன்மூலம் நிதி இழப்பை சரிக்கட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நடப்பு நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சியானது 5 சதவீத அளவே இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுவதால் நிதி சிக்கலை சமாளிக்க செலவுக் குறைப்பை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது.

செலவுக் குறைப்பில் மத்திய அரசு இறங்குவது இது முதல்முறையல்ல. கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் மாதமும் இதுபோல செலவுக் குறைப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டது. அப்போது அது 10 சதவீதமாக இருந்தது. இப்போது 20 சதவீதமாக இரட்டிப்பாகியுள்ளது

செலவு குறைப்பு நடவடிக்கைகளில் ஒருபகுதியாக, அரசுத் துறைகள் சார்பில் நடத்தப்படும் கண்காட்சிகள், விழாக்கள், கருத்தரங்குகள், மாநாடுகளிலும் சிக்கணத்தை கடை பிடிக்குமாறும் அறிவுறுத்த பட்டுள்ளதாம். அதேபோல வாகனங்கள் வாங்குவது, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுப் பயணங்களைக் குறைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...