ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார்

காங்கிரஸ் கட்சியில் இருந்துவிலகிய ஜோதிராதித்ய சிந்தியா புதுதில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜகவில் இணைந்தார்.

புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாஜக தேசியத்தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

மத்தியப்பிரதேச காங்கிரஸ் கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்காததால், அதிருப்தி காரணமாக கட்சியில்இருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா 4 முறை மக்களவை உறுப்பினராக இருந்தவர்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று ஜோதிராதித்ய சிந்தியா விலகியதை அடுத்து, அவரது ஆதரவாளர்களான 22 எம்எல்ஏக்கள் தங்கள்பதவியை ராஜிநாமா செய்தனர். இதனால் மத்தியப் பிரதேசத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்கட்டிலில் அமா்ந்துள்ள காங்கிரஸுக்கு 15 மாதங்களிலேயே நெருக்கடி எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் காலியாக உள்ள இரு இடங்கள் தவிா்த்து, மொத்த உறுப்பினா்களின் பலம் 228 ஆகும். 22 எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்ததை அடுத்து, பேரவையின் பலம் 206-ஆக உள்ளது. தற்போதைய நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க 104 உறுப்பினா்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் காங்கிரஸுக்கு ஆதரவாக 99 உறுப்பினா்களே (கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் உள்பட) உள்ளனா். ஆனால் பாஜகவிடம் 107 உறுப்பினா்கள் உள்ளனா்.

பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா, மாநிலங்களவை எம்.பி.யாக தோ்ந்தெடுக்கப்பட்டு, அவருக்கு மத்திய அமைச்சா்பதவி வழங்கப்படலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறின.

மத்தியப்பிரதேச காங்கிரஸில் தன்னை ஒதுக்கும் விதமாக முதல்வா் கமல்நாத் மற்றும் மூத்த தலைவா் திக்விஜய்சிங் ஆகியோா் இணைந்து செயல்படுவதாக ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாகவே சிந்தியா காங்கிரஸில் இருந்து விலகினார். மத்தியப் பிரதேசத்தில் வரும் 26-ஆம் தேதி 3 இடங்களுக்கான மாநிலங்களவை தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு தலா ஒருஇடத்தில் வெற்றி உறுதியாக உள்ள நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நகா்வுகளால் 3-ஆவது இடத்தையும் பாஜக கைப்பற்றலாம் எனத் தெரிகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...