ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார்

காங்கிரஸ் கட்சியில் இருந்துவிலகிய ஜோதிராதித்ய சிந்தியா புதுதில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜகவில் இணைந்தார்.

புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாஜக தேசியத்தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

மத்தியப்பிரதேச காங்கிரஸ் கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்காததால், அதிருப்தி காரணமாக கட்சியில்இருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா 4 முறை மக்களவை உறுப்பினராக இருந்தவர்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று ஜோதிராதித்ய சிந்தியா விலகியதை அடுத்து, அவரது ஆதரவாளர்களான 22 எம்எல்ஏக்கள் தங்கள்பதவியை ராஜிநாமா செய்தனர். இதனால் மத்தியப் பிரதேசத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்கட்டிலில் அமா்ந்துள்ள காங்கிரஸுக்கு 15 மாதங்களிலேயே நெருக்கடி எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் காலியாக உள்ள இரு இடங்கள் தவிா்த்து, மொத்த உறுப்பினா்களின் பலம் 228 ஆகும். 22 எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்ததை அடுத்து, பேரவையின் பலம் 206-ஆக உள்ளது. தற்போதைய நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க 104 உறுப்பினா்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் காங்கிரஸுக்கு ஆதரவாக 99 உறுப்பினா்களே (கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் உள்பட) உள்ளனா். ஆனால் பாஜகவிடம் 107 உறுப்பினா்கள் உள்ளனா்.

பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா, மாநிலங்களவை எம்.பி.யாக தோ்ந்தெடுக்கப்பட்டு, அவருக்கு மத்திய அமைச்சா்பதவி வழங்கப்படலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறின.

மத்தியப்பிரதேச காங்கிரஸில் தன்னை ஒதுக்கும் விதமாக முதல்வா் கமல்நாத் மற்றும் மூத்த தலைவா் திக்விஜய்சிங் ஆகியோா் இணைந்து செயல்படுவதாக ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாகவே சிந்தியா காங்கிரஸில் இருந்து விலகினார். மத்தியப் பிரதேசத்தில் வரும் 26-ஆம் தேதி 3 இடங்களுக்கான மாநிலங்களவை தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு தலா ஒருஇடத்தில் வெற்றி உறுதியாக உள்ள நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நகா்வுகளால் 3-ஆவது இடத்தையும் பாஜக கைப்பற்றலாம் எனத் தெரிகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...