அருணாச்சல பிரேதேசத்தில் மீண்டும் ஆட்சி அமைத்த பாஜக

வடகிழக்கு மாநிலமான அருணாசலபிரதேசத்தின் முதல்வராக பெமாகாண்டு தொடா்ந்து 3-வது முறையாக இன்று பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து சன்ஜா மியன் துணை முதல்வராக பதவியேற்று கொண்டார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜெ.பி..நட்டா மற்றும் பல தலைவர்கள் முன்னிலையில் முக்டோவின் எம்.எல்.ஏ.வான காண்டுவுக்கு ஆளுநர் கே.டி.பர்நாயக் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.சீனாவுடன் சா்வதேச எல்லையைப் பகிா்ந்து கொள்ளும் அருணாசல பிரதேசத்தில் மக்களவையுடன் சோ்ந்து மாநில சட்டப்பேரவைக்கும் தோ்தல் நடைபெற்றது.

இந்த மாநிலத்தில் மொத்தம் 60 பேரவைத் தொகுதிகள் உள்ளன. முதல்வா் பெமா காண்டு உள்பட 10 பாஜக வேட்பாளா்கள் போட்டியின்றி தோ்வாயினா். மீதமுள்ள 50 தொகுதிகளிலும் பாஜக போட்டியிட்டது. பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில்கூட (31)காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி (என்பிபி) உள்ளிட்ட பிற கட்சிகள் களமிறங்கவில்லை. 50தொகுதிகளில் பாஜக 36 இடங்களில் வென்றது. ஏற்கெனவே போட்டியின்றி தோ்வான 10 இடங்களையும் சோ்த்து, பாஜகவின் பலம் 46-ஆனது.தேசிய மக்கள் கட்சி (என்பிபி) 5, தேசியவாத காங்கிரஸ் 3, அருணாசல் மக்கள் கட்சி 2 , சுயேச்சைகள் 3 இடங்களில் வெற்றி பெற்றன. காங்கிரஸுக்கு ஓரிடம் மட்டுமே கிடைத்தது.

இதையடுத்து, புதன்கிழமை நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வராக பெமா காண்டு மீண்டும் ஒருமனதாக தோ்ந்தெடுக்கப்பட்டாா். ஆளுநா் கைவல்யா திரிவிக்ரம் பா்நாயக்கைச் சந்தித்த பெமா காண்டு ஆட்சியமைக்க உரிமை கோரினாா்.

இதையடுத்து, பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சியைப் பிடித்த நிலையில், பெமா காண்டு இன்று முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாரம்பரிய சமையற்கலையை வலுப்பட ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்படுத்தும் நோக்கில் தேசிய இளையோர் சமையல் போட்டி தொடக்கம் மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து பிஎச்டி வர்த்தக மற்றும் ...

என்எல்சி அதன் துணை நிறுவனங்களி ...

என்எல்சி அதன் துணை நிறுவனங்களில் ரூ.7,000 கோடி முதலீடு செய்ய அமைச்சரவை ஒப்புதல் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்எல்சி) அதன் துணை ...

100 மாவட்டங்களில் பிரதமரின் தன-தா ...

100 மாவட்டங்களில் பிரதமரின் தன-தானிய வேளாண் திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (16.07.2025) ...

பகுதி நேர ஆசிரியர் போராட்டம்: ந ...

பகுதி நேர ஆசிரியர் போராட்டம்: நயினார் நாகேந்திரன் ஆதரவு 'தேர்தல் நேரத்தில், நேரில் சென்று ஆசிரியர்களுக்கு ஆதரவு அளிப்பதும், ...

காவிதான் தமிழை வளர்த்தது கருப் ...

காவிதான் தமிழை வளர்த்தது கருப்பு வளர்க்கவில்லை: தமிழிசை ''காவிதான் தமிழை வளர்த்தது. கருப்பு வளர்க்கவில்லை,'' என, ...

இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்த ...

இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தின் மையமாக கல்வி இருக்க வேண்டும் என்று அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார் நமது நாடு வளர்ச்சியடைந்து வரும் நிலையில், நமது முதன்மைக் ...

மருத்துவ செய்திகள்

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...