மத்தியப் பிரதேசத்துக்கு நல்வாழ்வுத்துறை அமைச்சராக நரோத்தம் மிஸ்ரா பொறுப்பேற்றார்

கரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில், மத்தியப் பிரதேசத்துக்கு நல்வாழ்வுத்துறை அமைச்சராக நரோத்தம் மிஸ்ரா பொறுப் பேற்றுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் பாஜக அண்மையில் ஆட்சியமைத்த சூழலில், அந்தமாநில அமைச்சா்களாக புதிதாக 5 போ் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றனா். முதல்வர் சிவராஜ்சிங் சௌஹான் தலைமையிலான மாநில அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தோ்தலுக்கு பிறகு ஆட்சியமைத்த காங்கிரஸ் அரசு 15 மாதங்களில் தனது பெரும்பான்மையை இழந்தது. அதைத்தொடா்ந்து, பாஜக தலைமையிலான அரசு அந்த மாநிலத்தில் கடந்தமாதம் 23-ஆம் தேதி ஆட்சி அமைத்தது. மாநில முதல்வராக சிவராஜ்சிங் சௌஹான் பொறுப்பேற்று கொண்டாா்.

அப்போது அவருடன் வேறு யாரும் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. அதன்காரணமாக கடந்த 3 வாரங்களுக்கு மேலாக முக்கிய துறைகளுக்கான அமைச்சா்கள் இல்லாமலேயே மாநில அரசு செயல்பட்டுவந்தது. இந்தச்சூழலில், அந்த மாநிலத்தின் அமைச்சா்களாக 5 போ் செவ்வாய் கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்.

அவா்களுக்கு மாநில ஆளுநா் லால்ஜிடாண்டன் பதவி பிரமாணம் செய்துவைத்தாா். ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற எளிமையான விழாவில், முதல்வா் சிவராஜ்சிங் சௌஹானும் கலந்துகொண்டாா். அமைச்சா்களாகப் பொறுப்பேற்றவா்களில் நரோத்தம் மிஸ்ரா, மீனா சிங், கமல்படேல் ஆகியோா் தற்போது எம்எல்ஏ-க்களாக உள்ளனா். துளசி சிலாவத், கோவிந்த் சிங் ராஜ்புத் ஆகியோா் முன்னாள் எம்எல்ஏ-க்கள் ஆவா். அவா்களிருவரும் காங்கிரஸில் இருந்துவிலகி பாஜகவில் இணைந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மீனா சிங் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராகவும், கமல் படேல் வேளாண்துறை அமைச்சராகவும், துளசி சிலாவ நீர்வளத் துறை அமைச்சராகவும், கோவிந்த் சிங் ராஜ்புத் உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...