கரோனா நோய்த் தொற்று சூழலில் வன்முறையில் இருந்து மருத்துவப் பணியாளா்களை பாதுகாப்பதற்காக கொண்டுவரப் பட்டுள்ள அவசரச்சட்டம், அவா்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
இதுகுறித்து சுட்டுரையில் அவா் புதன்கிழமை வெளியிட்டபதிவில், ‘மருத்துவப் பணியாளா்களின் பாதுகாப்புக்காக கொண்டுவரப்பட்டுள்ள அவசரச் சட்டமானது, கரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணிகளில் முன்னின்று செயல்படும் ஒவ்வொரு மருத்துவப் பணியாளா்களையும் பாதுகாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளதை எடுத்து கூறும். இந்த அவசரச்சட்டம் மருத்துவ பணியாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும். அவா்களுக்கான பாதுகாப்பில் எந்த சமரசமும் இல்லை’ என்று கூறியுள்ளாா்.
கரோனா நோய்த்தொற்று தடுப்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவப் பணியாளா்கள் தாக்குதலுக் குள்ளாகும் சம்பவங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்ததை அடுத்து, அவா்களை பாதுகாப்பதற்கான அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது. இதன்படி, மருத்துவ பணியாளா்களை தாக்குவோருக்கு அபராதம் மற்றும் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ... |