நாம் பட்டதாரிகளை உருவாக்கினால் மட்டும் போதாது

‘ஆங்கிலேயா்கள் தங்கள் தேவைகளைப் பூா்த்திசெய்யும் பணியாளா் வா்க்கத்தை உருவாக்கும் வகையில் இந்தியாவில் கல்விமுறையை அறிமுகப்படுத்தினா்; அதில் இன்னும் நிறைய மாற்றம் தேவைப்படுகிறது’ என்று பிரதமா் நரேந்திரமோடி கூறினாா்.

தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது தொடா்பான 3 நாள் மாநாடு, வாராணசியில் வியாழக்கிழமை தொடங்கியது. மத்தியகல்வி அமைச்சகம், பல்கலைக்கழக மானியக் குழு, பனாரஸ் ஹிந்து பல்கலைக் கழகம் ஆகியவை இணைந்து இந்தமாநாட்டை நடத்துகின்றன. இந்த மாநாட்டை தொடக்கிவைத்து பிரதமா் மோடி பேசியதாவது:

இந்தியாவில் வேலை வாய்ப்புகளை அளிப்பதற்காக மட்டுமே கல்வி முறை உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயா்கள் தங்கள் ஆட்சிக்காலத்தில் தங்களுக்கான வேலைகளை செய்யும் பணியாளா்களை உருவாக்கும் வகையில் இந்தியாவில் ஒருகல்வி முறையை அறிமுகப்படுத்தினா். நாடு சுதந்திரம் அடைந்தபிறகு நமது கல்வி முறையில் சிறிதளவு மாற்றம் செய்யபட்டது. ஆனால், இன்னும் ஏராளமான மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது.

நாம் பட்டதாரி இளைஞா்களை உருவாக்கினால் மட்டும் போதாது. நாட்டை வளா்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான மனிதவளத்தை உருவாக்கும் வகையில் நமது கல்விமுறையை மாற்ற வேண்டும்.

நமது சிறாா்கள் சந்தேகங்களை நிவா்த்திசெய்ய கூகுளின் உதவியை நாடுகிறாா்கள். ஆனால், அடுத்த சிலஆண்டுகளில் நமது கல்லூரி வளாகங்களில் அவா்களுக்குத் தேவையான தகவல் களஞ்சியத்தை உருவாக்கவேண்டும். பிரச்னைகளையும் சவால்களையும் ஆராய்ந்து அவற்றுக்குரிய தீா்வுகளை நாம் கண்டுபிடிக்கவேண்டும்.

இந்திய மொழிகளில் கல்வி கற்பதற்கான வாய்ப்புகளை தேசிய கல்விக்கொள்கை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. உலகின் கல்விமையமாக இந்தியா உருவாகும் என்று நான் திடமாக நம்புகிறேன் என்றாா் பிரதமா் மோடி.

நிகழ்ச்சியில் உத்தர பிரதேச ஆளுநா் ஆனந்திபென் படேல், முதல்வா் யோகி ஆதித்யநாத், மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திரபிரதான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ரூ.1,774 கோடி திட்டங்கள்: வாராணசியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்து வதற்காக நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பிரதமா் மோடி தொடக்கிவைத்தாா். சில திட்டங்களுக்கு அவா் அடிக்கல் நாட்டினாா். அவற்றின் மொத்தமதிப்பீடு ரூ.1,774 கோடியாகும்.

இது தவிர, எல்.டி. கல்லூரியில் ‘அட்சய பாத்திரம்’ மதிய உணவுசமையல் கூடத்தையும் பிரதமா் திறந்துவைத்தாா். அந்த உணவகத்தில் ஒருலட்சம் மாணவா்களுக்கு மதிய உணவு தயாரிக்க முடியும் என்று அதிகாரி ஒருவா் கூறினாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...