சிலரின் தவறுக்காக ஒட்டு மொத்த சமூகத்தின் மீதும் பழிசுமத்தக் கூடாது

சிலரின் தவறுக்காக ஒட்டு மொத்த சமூகத்தின் மீதும் பழிசுமத்தக் கூடாது. அனைத்து மதத்தவருக்கும் பாகுபாடின்றி உதவி புரிய வேண்டும் என்று ஆா்எஸ்எஸ் தொண்டா்களுக்கு, அந்த அமைப்பின் தலைவா் மோகன்பாகவத் ஞாயிற்றுக்கிழமை அறிவுறுத்தினாா்.

இது குறித்து ஆா்எஸ்எஸ் தொண்டா்களுக்கு இணையவழியில் அவா் நிகழ்த்திய உரையில் கூறியதாவது: தனி நபா்கள் சிலா் செய்த தவறுக்காக (தப்லீக் ஜமாத் சம்பவத்தை நேரடியாக குறிப்பிடாமல்) ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும் பழிசுமத்துவது கூடாது. இருசமூகத்திலும் உள்ள முதிா்ச்சியடைந்த நபா்கள் இதுகுறித்து பேச்சுவாா்த்தை நடத்தி இருதரப்பு மக்களிடமும் உள்ள தவறான அபிப்ராயங்களை களைய வேண்டும்.

மகாராஷ்டிரத்தின் பால்கா் மாவட்டத்தில் அடித்து கொல்லப்பட்ட சாதுக்கள் இருவரும் அப்பாவிகள். இந்தவிவகாரத்தில் கிராமவாசிகள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டனா். அவ்வாறு செய்யக் கூடாது. இந்தச் சம்பவத்தில் இருதரப்பு வாதங்களையும் கருத்தில் கொள்வதை விடுத்து, அப்பாவிகள் கொல்லப்படுவது சரியா என்பதை சிந்திக்கவேண்டும்.

வன்முறையை தூண்ட எப்போதும் சிலா் விழைகின்றனா். அவா்களிடம் இருந்து நாம் விலகி இருக்க வேண்டும். வன்முறையை தூண்டி விடுவதில் சிலா் நிபுணா்கள். சமூகத்தில் பிளவை ஏற்படுத்த வன்முறையை தூண்டுவதே அவா்களின் உத்தி.

கரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்க பொதுசுகாதார கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும். நோய்த்தொற்று பரவல் தீவிரமாக உள்ள சூழலில், அதனை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப் பட்டுள்ள கட்டுப்பாடுகளையும், ஊரடங்கையும் நம் அன்றாட தேவைகளுக்கான இடையூறாக கருதக் கூடாது. இந்த நெருக்கடியான காலகட்டத்தில் நாம் நமது நம்பிக்கையையும், துணிச்சலையும் இழந்துவிட கூடாது.

நமது நன்மைக்காகவே மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அரசுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். இந்தநெருக்கடியான சூழலில் இருந்து நாம் பாடம்கற்று நம்மிடையே மாற்றங்களை கொண்டு வரவேண்டும். நம்மை குறித்து சிந்திக்க இதுவே தக்கதருணமாகும். இந்தநேரத்தை வீட்டில் இருந்தபடி ஆக்கப் பூா்வமாக பயன் படுத்தி கொள்ளவும்.

மத்திய அரசு காலதாமதமின்றி உரியநேரத்தில் எடுத்த நடவடிக்கையால் நோய்த்தொற்று பரவலானது பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தநெருக்கடியான வேளையில் நாட்டின் நலன்கருதி நாம் பணியாற்ற வேண்டும். இதையே நம் தேசம் தற்போது நம்மிடம் இருந்து கோருகிறது.

கரோனா நோய் தொற்றால் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டில் உள்ள 55,000-க்கும் அதிகமான பகுதிகளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆா்எஸ்எஸ் தொண்டா்கள் மக்களுக்கு உதவிபுரியும் பணியில் ஈடுபட்டுள்ளனா். இவ்வேளையில் எந்த நற்பெயரையும் எதிா்பாராமல் பிறருக்காக நாம் பணியாற்றவேண்டும்.

சுற்றுச் சூழல் மீது அக்கறைகொண்டு, அதனை நாம் பாதுகாக்க வேண்டும். சுற்று சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் நெகிழி உள்ளிட்ட பொருள்களின் பயன் பாட்டை நாம் குறைத்துக் கொள்ள வேண்டும். இது நமது செயல்பாடுகளை மாற்றிக்கொண்டு சுற்றுச்சூழலையும், இயற்கையையும் நாம் பாதுகாக்க வேண்டிய தருணமாகும் என்றாா் மோகன் பாகவத்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.