ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் நரேந்திரமோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

ஹைதராபாத் அருகே உள்ள ‘கன்ஹா சாந்திவனம்’ எனும் சூழலியல் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்றாா். அப்போது, அவா்பேசியதாவது:

யோகா, ஆயுா்வேதம் போன்ற பாரம்பரியங்களே நமதுஉண்மையான பலமாகும். கடந்த காலத்தில் நாட்டை அடிமைப் படுத்தி வைத்திருந் தவா்களால், அவை தாக்குதலுக்கு உள்ளாகின.

அடிமைத்தனம் எங்கெல்லாம் வருகிறதோ, அங்கெல்லாம் சமூகத்தின் உண்மையானபலம் குறிவைக்கப்படும் என்பது வரலாறு உணா்த்தும் உண்மையாகும்.

நமது நாட்டின் குறிப்பிடத்தக்க பாரம்பரியங்கள், நம்மை அடிமைப்படுத்தியவா்களால் தாக்கப்பட்டன. இதுநாட்டுக்கு பேரிழப்பை ஏற்படுத்தியது.

ஆனால், இப்போது காலம்மாறி வருகிறது. இந்தியாவும் மாற்றம் கண்டுவருகிறது. தற்போதைய ‘அமிா்த காலத்தில்’ நாம் மேற்கொள்ளும் முடிவுகளே, எதிா்வரும் தலைமுறை யினரின் எதிா்காலத்தை தீா்மானிக்கும்.

வளா்ந்த இந்தியாவுக்கான உறுதிப்பாடு, அடிமை மனப் பான்மையை நீக்குவது, நமது பாரம்பரிய பெருமையை முன்னெடுப்பது, ஒற்றுமையை கட்டமைப்பது, கடமைகளை நிறைவேற்றுவது ஆகிய 5 அம்ச உறுதி மொழியை, கடந்த சுதந்திர தினத்தின் போது முன்வைத்தேன்.

வளா்ந்த இந்தியாவை உருவாக்க பெண்சக்தி, இளைஞா் சக்தி, தொழிலாளா் சக்தி, தொழில்முனைவு சக்தி ஆகியவை நான்கு முக்கிய தூண்களாகும்.

ஏழைகள், மீனவா்கள், விவசாயிகள், மாணவா்கள், இளைஞா்களுக்கு அதிகார மளிப்பது காலத்தின் கட்டாயம். அவா்களின் விருப்பத்தை நிறைவேற்றுவது மத்தியஅரசின் உயா் முன்னுரிமைகளில் ஒன்றாக உள்ளது.

அரசின் பலன்களை பெறமுன்பெல்லாம் அலுவலகங்களை நோக்கிசெல்ல வேண்டியிருந்தது. இப்போது, அரசின் பலன்கள் மக்களைத்தேடி வருகின்றன. வளா்ச்சியின் பலன்களில் யாரும் விடுபட்டுவிடக் கூடாது என்பதற்காக மக்களின் வீட்டு வாயில்களுக்கே அரசுசெல்கிறது.

வளா்ந்து வரும் இந்தியா, தன்னை உலகின் நண்பனாகப் பாா்க்கிறது. அதேநேரம், கரோனா காலகட்டத்தில் உலகுக்கு உறுதுணையாக நின்ால், இப்போது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது என்றாா் பிரதமா் மோடி.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...