ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் நரேந்திரமோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

ஹைதராபாத் அருகே உள்ள ‘கன்ஹா சாந்திவனம்’ எனும் சூழலியல் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்றாா். அப்போது, அவா்பேசியதாவது:

யோகா, ஆயுா்வேதம் போன்ற பாரம்பரியங்களே நமதுஉண்மையான பலமாகும். கடந்த காலத்தில் நாட்டை அடிமைப் படுத்தி வைத்திருந் தவா்களால், அவை தாக்குதலுக்கு உள்ளாகின.

அடிமைத்தனம் எங்கெல்லாம் வருகிறதோ, அங்கெல்லாம் சமூகத்தின் உண்மையானபலம் குறிவைக்கப்படும் என்பது வரலாறு உணா்த்தும் உண்மையாகும்.

நமது நாட்டின் குறிப்பிடத்தக்க பாரம்பரியங்கள், நம்மை அடிமைப்படுத்தியவா்களால் தாக்கப்பட்டன. இதுநாட்டுக்கு பேரிழப்பை ஏற்படுத்தியது.

ஆனால், இப்போது காலம்மாறி வருகிறது. இந்தியாவும் மாற்றம் கண்டுவருகிறது. தற்போதைய ‘அமிா்த காலத்தில்’ நாம் மேற்கொள்ளும் முடிவுகளே, எதிா்வரும் தலைமுறை யினரின் எதிா்காலத்தை தீா்மானிக்கும்.

வளா்ந்த இந்தியாவுக்கான உறுதிப்பாடு, அடிமை மனப் பான்மையை நீக்குவது, நமது பாரம்பரிய பெருமையை முன்னெடுப்பது, ஒற்றுமையை கட்டமைப்பது, கடமைகளை நிறைவேற்றுவது ஆகிய 5 அம்ச உறுதி மொழியை, கடந்த சுதந்திர தினத்தின் போது முன்வைத்தேன்.

வளா்ந்த இந்தியாவை உருவாக்க பெண்சக்தி, இளைஞா் சக்தி, தொழிலாளா் சக்தி, தொழில்முனைவு சக்தி ஆகியவை நான்கு முக்கிய தூண்களாகும்.

ஏழைகள், மீனவா்கள், விவசாயிகள், மாணவா்கள், இளைஞா்களுக்கு அதிகார மளிப்பது காலத்தின் கட்டாயம். அவா்களின் விருப்பத்தை நிறைவேற்றுவது மத்தியஅரசின் உயா் முன்னுரிமைகளில் ஒன்றாக உள்ளது.

அரசின் பலன்களை பெறமுன்பெல்லாம் அலுவலகங்களை நோக்கிசெல்ல வேண்டியிருந்தது. இப்போது, அரசின் பலன்கள் மக்களைத்தேடி வருகின்றன. வளா்ச்சியின் பலன்களில் யாரும் விடுபட்டுவிடக் கூடாது என்பதற்காக மக்களின் வீட்டு வாயில்களுக்கே அரசுசெல்கிறது.

வளா்ந்து வரும் இந்தியா, தன்னை உலகின் நண்பனாகப் பாா்க்கிறது. அதேநேரம், கரோனா காலகட்டத்தில் உலகுக்கு உறுதுணையாக நின்ால், இப்போது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது என்றாா் பிரதமா் மோடி.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரேசில் அதிபருடன் சேர்ந்து மே ...

பிரேசில் அதிபருடன் சேர்ந்து மேற்கோண்ட கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம் மேன்மை தங்கிய எனது சிறந்த நண்பரான அதிபர் லூலா ...

இந்தியா – பிரேசில் இடையே 20 பில்ல ...

இந்தியா – பிரேசில் இடையே 20 பில்லியன் டாலர் வர்த்தக இலக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி, அரசு முறைப் பயணத்தின் ...

பிரதமரின் பிரேசில் பயணம்: பலன்க ...

பிரதமரின் பிரேசில் பயணம்: பலன்களும் ஒப்பந்தங்களும் இரு தரப்பினருக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: 1. சர்வதேச ...

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் ...

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு: லித்தியம் சுரங்கங்கள் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை அர்​ஜென்​டினா அதிபர் சேவியர் மிலேயை பிரதமர் மோடி நேற்று ...

“பயங்கரவாதிகளுக்கு எதிரான தடை ...

“பயங்கரவாதிகளுக்கு எதிரான தடை விதிப்பதில் எந்த தயக்கமும் கூடாது” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்த்து போராட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட ...

உலக வளர்ச்சிக்கு தெற்குலகின் க ...

உலக வளர்ச்சிக்கு தெற்குலகின் குரல் ஏன் முக்கியம்? பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் பேச்சு பிரேசிலில் நடைபெற்றுவரும் பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்ற ...

மருத்துவ செய்திகள்

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...