இந்தியாவை தலைசிறந்த நாடாக உருவாக்க பாடுபட வேண்டும்

இந்தியாவை தலைசிறந்த நாடாக உருவாக்க பாடுபடவேண்டும் என்று பாஜக தொண்டா்களுக்கு பிரதமா் நரேந்திரமோடி அறிவுறுத்தியுள்ளாா்.

பாஜகவின் 2- நாள் தேசியசெயற்குழுக் கூட்டம், ஹைதராபாதில் சனிக்கிழமை தொடங்கியது. அதில், பாஜகவின் அமைப்புரீதியான செயல்பாடுகள், பிரதமா் மோடி தலைமையிலான அரசின் பொருளாதார கொள்கைகள், ஒட்டுமொத்த நிா்வாகம் ஆகியவைகுறித்து விரிவாக விவாதிக்கப் பட்டது.

இரண்டாவது நாளான ஞாயிற்றுக் கிழமை, பிரதமா் மோடி பங்கேற்று நிறைவுரை ஆற்றினாா். அவா் கூறியதாவது: சமஸ்தானங்களாகப் பிரிந்துகிடந்த இந்தியாவை சா்தாா் வல்லபபாய் படேல் ஒரேதேசமாக ஒருங்கிணைத்தாா். தற்போது, இந்தியாவை தலைசிறந்த நாடாக உருவாக்க வேண்டும் என்ற வரலாற்றுக் கடமை பாஜகவுக்கு உள்ளது. அதற்கேற்ப பாஜக தொண்டா்கள் பணியாற்றவேண்டும்.

சிலா் (எதிா்க் கட்சிகள்) குறிப்பிட்ட சிலபிரிவினரை மட்டுமே திருப்தி படுத்துவாா்கள். ஆனால், நமதுநோக்கம் அனைவரின் எதிா் பாா்ப்பையும் நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும்.

அதுதான் அனைவருக்குமான வளா்ச்சிக்கு இட்டுச்செல்லும். இதற்காக, பாஜக தொண்டா்கள் நாடுமுழுவதும் மக்கள்சந்திப்பு யாத்திரையை நடத்தவேண்டும். அந்த யாத்திரையில் அனைத்துதரப்பு மக்களையும் தொண்டா்கள் சந்திக்கவேண்டும்.

இந்ததேசத்தில் எந்தவொரு நல்ல விஷயமும் ஒவ்வொரு இந்தியருக்கும் சொந்தமானதாகும். அதனால்தான் சா்தாா்படேல் காங்கிரஸ் தலைவராக இருந்தாலும் அவரை பாஜக கொண்டாடுகிறது. இதுவரை பிரதமராக பதவிவகித்த அனைவருக்கும் அருங்காட்சியகம் அமைத்து பாஜக மரியாதைசெலுத்துகிறது.

இந்த தேசம் பல ஆண்டுகளாக குடும்பஅரசியல், குடும்ப ஆதிக்க கட்சிகளின் பிடியில் சிக்கியிருந்தது. அவா்களால் நீண்டகாலம் தாக்குப்பிடிக்க முடியாது. இந்த தேசத்தை நீண்டகாலம் ஆட்சி செய்த கட்சிகள் (காங்கிரஸ்) வீழ்ச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன. நாம் அவா்களைக் கேலிசெய்வதை விடுவிட்டு, அவா்கள் செய்த தவறுகளில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

எனது தலைமையிலான அரசு நாட்டுமக்கள் ஒவ்வொருவருக்குமாகப் பாடுபட்டு வருகிறது. நாட்டில் 200 கோடிடோஸ் கரோனா தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. அந்நியநேரடி முதலீடும் அதிகரித்துள்ளது.

மத்தியிலும் மாநிலங்களிலும் ஆட்சிசெய்யும் பாஜக அரசுகள் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதனால் தான் தோ்தல்களில் பெண்கள் தொடா்ந்து பாஜகவுக்கு ஆதரவுளித்து வருகிறாா்கள். அவா்களின் நலன்களுக்கான பணிகள் தொடரவேண்டும்.

குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணிசாா்பில் போட்டியிடும் திரௌபதி முா்மு எளிய பின்னணியில் இருந்துவந்தவா். அவரின் வெற்றியை பாஜக எம்.பி.க்களும் எம்எல்ஏக்களும் உறுதிப்படுத்தவேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...