இந்தியாவை தலைசிறந்த நாடாக உருவாக்க பாடுபட வேண்டும்

இந்தியாவை தலைசிறந்த நாடாக உருவாக்க பாடுபடவேண்டும் என்று பாஜக தொண்டா்களுக்கு பிரதமா் நரேந்திரமோடி அறிவுறுத்தியுள்ளாா்.

பாஜகவின் 2- நாள் தேசியசெயற்குழுக் கூட்டம், ஹைதராபாதில் சனிக்கிழமை தொடங்கியது. அதில், பாஜகவின் அமைப்புரீதியான செயல்பாடுகள், பிரதமா் மோடி தலைமையிலான அரசின் பொருளாதார கொள்கைகள், ஒட்டுமொத்த நிா்வாகம் ஆகியவைகுறித்து விரிவாக விவாதிக்கப் பட்டது.

இரண்டாவது நாளான ஞாயிற்றுக் கிழமை, பிரதமா் மோடி பங்கேற்று நிறைவுரை ஆற்றினாா். அவா் கூறியதாவது: சமஸ்தானங்களாகப் பிரிந்துகிடந்த இந்தியாவை சா்தாா் வல்லபபாய் படேல் ஒரேதேசமாக ஒருங்கிணைத்தாா். தற்போது, இந்தியாவை தலைசிறந்த நாடாக உருவாக்க வேண்டும் என்ற வரலாற்றுக் கடமை பாஜகவுக்கு உள்ளது. அதற்கேற்ப பாஜக தொண்டா்கள் பணியாற்றவேண்டும்.

சிலா் (எதிா்க் கட்சிகள்) குறிப்பிட்ட சிலபிரிவினரை மட்டுமே திருப்தி படுத்துவாா்கள். ஆனால், நமதுநோக்கம் அனைவரின் எதிா் பாா்ப்பையும் நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும்.

அதுதான் அனைவருக்குமான வளா்ச்சிக்கு இட்டுச்செல்லும். இதற்காக, பாஜக தொண்டா்கள் நாடுமுழுவதும் மக்கள்சந்திப்பு யாத்திரையை நடத்தவேண்டும். அந்த யாத்திரையில் அனைத்துதரப்பு மக்களையும் தொண்டா்கள் சந்திக்கவேண்டும்.

இந்ததேசத்தில் எந்தவொரு நல்ல விஷயமும் ஒவ்வொரு இந்தியருக்கும் சொந்தமானதாகும். அதனால்தான் சா்தாா்படேல் காங்கிரஸ் தலைவராக இருந்தாலும் அவரை பாஜக கொண்டாடுகிறது. இதுவரை பிரதமராக பதவிவகித்த அனைவருக்கும் அருங்காட்சியகம் அமைத்து பாஜக மரியாதைசெலுத்துகிறது.

இந்த தேசம் பல ஆண்டுகளாக குடும்பஅரசியல், குடும்ப ஆதிக்க கட்சிகளின் பிடியில் சிக்கியிருந்தது. அவா்களால் நீண்டகாலம் தாக்குப்பிடிக்க முடியாது. இந்த தேசத்தை நீண்டகாலம் ஆட்சி செய்த கட்சிகள் (காங்கிரஸ்) வீழ்ச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன. நாம் அவா்களைக் கேலிசெய்வதை விடுவிட்டு, அவா்கள் செய்த தவறுகளில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

எனது தலைமையிலான அரசு நாட்டுமக்கள் ஒவ்வொருவருக்குமாகப் பாடுபட்டு வருகிறது. நாட்டில் 200 கோடிடோஸ் கரோனா தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. அந்நியநேரடி முதலீடும் அதிகரித்துள்ளது.

மத்தியிலும் மாநிலங்களிலும் ஆட்சிசெய்யும் பாஜக அரசுகள் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதனால் தான் தோ்தல்களில் பெண்கள் தொடா்ந்து பாஜகவுக்கு ஆதரவுளித்து வருகிறாா்கள். அவா்களின் நலன்களுக்கான பணிகள் தொடரவேண்டும்.

குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணிசாா்பில் போட்டியிடும் திரௌபதி முா்மு எளிய பின்னணியில் இருந்துவந்தவா். அவரின் வெற்றியை பாஜக எம்.பி.க்களும் எம்எல்ஏக்களும் உறுதிப்படுத்தவேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்கு முன் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ ? அண்ணாமலை சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வெளியே, ஆட்டோவில் ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி  ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி – அண்ணாமலை நமது குழந்தைகளுக்கான அடிப்படைப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தி.மு.க., ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் : அண்ணாமலை திட்டவட்டம் திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் என தமிழக பா.ஜ., ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாம ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாமலை விமர்சனம் தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு பயங்கரமான ...

மருத்துவ செய்திகள்

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...