திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை சென்னை ஆலந்தூரில் உள்ள அவரது வீட்டில்வைத்து சனிக் கிழமை அதிகாலை காவலர்கள் கைதுசெய்தனர்.
கடந்த பிப்., 15ம் தேதி திமுக இளைஞரணி சார்பில், அன்பகத்தில் நடந்த கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பட்டியலின மக்களுக்கு நீதிபதி பதவிகள் கிடைத்தது எல்லாம் திமுக போட்ட பிச்சை என்கிற ரீதியில் நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசினார்.இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக.,வும் வலியுறுத்தி வந்தது. இந்நிலையில் ஆதித் தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யான்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் ஆ.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டு விடுவிக்க பட்டுள்ளார் .
அவர்மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. அதாவது ஆதிதிராவிடர், பழங்குடியினர் மக்களுக்கு எதிரான செயல்பாடுகளை தடுத்துநிறுத்துவதற்காக – வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் (Scheduled Caste and Scheduled Tribe (Prevention of Atrocities) Act, 1989) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதியை, குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர்.அப்போது, இந்த விவகாரம் குறித்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதனால், அவரை சிறையில் அடைக்க முடியாது என திமுக தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இதனை ஏற்றுகொண்ட நீதிபதி அவரை இடைக்கால ஜாமினில் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தார்.
ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும் |
இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ... |
ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ... |