வன்கொடுமை சட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி கைது

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை சென்னை ஆலந்தூரில் உள்ள அவரது வீட்டில்வைத்து சனிக் கிழமை அதிகாலை காவலர்கள் கைதுசெய்தனர்.

கடந்த பிப்., 15ம் தேதி திமுக இளைஞரணி சார்பில், அன்பகத்தில் நடந்த கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பட்டியலின மக்களுக்கு நீதிபதி பதவிகள் கிடைத்தது எல்லாம் திமுக போட்ட பிச்சை என்கிற ரீதியில் நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசினார்.இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக.,வும் வலியுறுத்தி வந்தது. இந்நிலையில் ஆதித் தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யான்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் ஆ.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டு விடுவிக்க பட்டுள்ளார் .

அவர்மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. அதாவது ஆதிதிராவிடர், பழங்குடியினர் மக்களுக்கு எதிரான செயல்பாடுகளை தடுத்துநிறுத்துவதற்காக – வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் (Scheduled Caste and Scheduled Tribe (Prevention of Atrocities) Act, 1989) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

 

கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதியை, குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர்.அப்போது, இந்த விவகாரம் குறித்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதனால், அவரை சிறையில் அடைக்க முடியாது என திமுக தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இதனை ஏற்றுகொண்ட நீதிபதி அவரை இடைக்கால ஜாமினில் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...