ஏ.பி.வி.பி., மாணவர்களை அவர்களின் அலுவலகத்திற்குள் நுழைந்து கைது செய்ததற்கு பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி, பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்தும், தி.மு.க., அரசின் இந்த அலட்சியப் போக்கைக் கண்டித்தும், தி.மு.க., அரசைக் கண்டித்து போராட்டம் நடத்திய ஏ.பி.வி.பி., மாணவர் அமைப்பின் நிர்வாகிகளை, ஏ.பி.வி.பி. மாநில அலுவலகத்திற்குள் அத்துமீறி, இன்று அதிகாலை 4 மணி அளவில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தி.மு.க., அரசின் இந்த அடக்குமுறை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
குற்றவாளி தி.மு.க.,வைச் சேர்ந்தவர் என்பதால், அவரைக் காப்பாற்றும் நோக்கில், பாதிக்கப்பட்ட மாணவிக்காகப் போராடிய மாணவர்களைக் கைது செய்திருப்பது, திமுக அரசின் எதேச்சதிகாரப் போக்கு.
பாதிக்கப்பட்ட மாணவிக்காகப் போராடிய, ஏ.பி.வி.பி., மாணவர்கள் மீதான நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று தி.மு.க., அரசை வலியுறுத்துகிறேன், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ... |
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |
பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ... |