சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் செயல் பேச்சு சுதந்திரத்தின்கீழ் வராது.

‘ஆளுநர் ஆர்.என்.ரவியை தரக் குறைவாகப் பேசிய திமுக மேடைப்பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று வலியுறுத்தி காவல்துறையிடம் ஆளுநர் மாளிகை தரப்பிலும், பாஜக தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில்பேசிய திமுகவின் மேடைப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து தரக் குறைவாகவும் இழிவாகவும் பேசியதாக வீடியோ இன்று சமூக வலைதளங்களில் பரவியது. இந்நிலையில், இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலிடம் ஆளுநர் மாளிகை தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆளுநரின் துணைச் செயலாளர் எஸ். பிரசன்ன ராமசாமி இந்தப்புகாரை அளித்துள்ளார். சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் பேச்சு அடங்கிய வீடியோவை இணைத்து அவர் அளித்துள்ள புகார்மனுவில், ”ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக அவதூறாகவும், இழிவாகவும், மிரட்டக்கூடிய வகையிலும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியுள்ளார். அவரது இந்தப்பேச்சு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இது சட்டப்பிரிவு 124-ன் கீழ் நடவடிக்கை எடுக்கக்கூடிய (குடியரசுத் தலைவர், ஆளுநர்உள்ளிட்டோருக்கு எதிராக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான பிரிவு) குற்றம். இந்தப் பிரிவின் கீழும் பொருந்தக்கூடிய மற்றபிரிவுகளின் கீழும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக டிஜிபிக்கு அளித்துள்ள புகாரில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். மேலும், இதுதொடர்பாக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ”ஆளுநர் என்பவர் ஒருமாநிலத்தின் அரசியல் சாசனதலைமை. சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் பேச்சு, பேச்சு சுதந்திரத்தின்கீழ் நிச்சயம் வராது. எனவே, இந்தவிஷயத்தில் மாநில காவல்துறை கண்ணை மூடிக் கொண்டிருக்காது என நம்புகிறேன். இதேபோன்று ஒருவர் முதல்வர் குறித்து பேசிஇருந்தால் காவல்துறை அமைதியாக இருக்குமா? அந்த நபர் தொடர்ந்து இதுபோன்று இழிவாகபேசி வருகிறார். அவர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்எல்ஏக்கள் பலர் இருந்த மேடையில் அவர் இவ்வாறு பேசி இருக்கிறார். அந்தநபர் அவ்வாறு பேசியதற்கு அமைச்சரும் எம்எல்ஏக்களும்தான் காரணமா என்பதை முதல்வர் விளக்கவேண்டும். அவர் இவ்வாறு பேசிதற்காக இதுவரை யாரும் மன்னிப்பு கோரவில்லை. அவர்மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் காவல் துறை தோல்வி அடைந்துள்ளது” என குற்றம் சாட்டியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...