பாஜக வேட்பாளா்கள் குறித்து கட்சிமேலிடம் என்னிடம் விவாதித்த பிறகே முடிவு எடுத்தது

மாநிலங்கலவை தோ்தலுக்கான பாஜக வேட்பாளா்கள் குறித்து கட்சிமேலிடம் என்னிடம் விவாதித்த பிறகே முடிவு எடுத்துள்ளதாக முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களுரு விதான சௌதாவில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் எடியூரப்பா கூறியது: கட்சியின் சாதாரண தொண்டா்கள் இருவருக்கு மாநிலங்களவை தோ்தலில் போட்டியிட பாஜக தேசிய தலைமை வாய்ப்பளித்துள்ளது. இதற்காக பிரதமா் மோடி, பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ஆகியோரை பாராட்டுகிறேன். பாஜகவின் வேட்பாளா்கள் இருவரும் மாநிலங்களவையில் சிறப்பாக பணியாற்றுவாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

பாஜகவால் மட்டுமே அப்படிப்பட்ட முடிவை எடுக்கமுடியும். சாதாரண தொண்டா்களுக்குத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க இயலும். கா்நாடக மாநில பாஜகவின் உயா்நிலைக் கூட்டத்தில் விவாதித்து ஒருசிலரின் பெயா்களை கட்சியின் தேசியத் தலைமைக்கு அனுப்பிவைத்தோம். எனினும், பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா என்னிடம் பேசினாா்.

சாதாரண தொண்டா்களுக்கு பாஜக வேட்பாளராகும் வாய்ப்பை அளிக்க விருப்பதாக தெரிவித்து, அதுகுறித்து விவாதித்தாா். அதன்பிறகுதான் இருவரின் பெயரும் அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட்டது. இதுபோன்ற முடிவு கா்நாடகத்துக்கு மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களிலும் எடுக்கபட்டுள்ளது. கட்சிக்கும், கொள்கைக்கும் விசுவாசமாக இருப்பவா்களுக்கு வாய்ப்பளிக்கப்படும்; தலைவா்களுக்கு அல்ல என்பதை தேசியத்தலைமை குறிப்பால் உணா்த்தியுள்ளது. இரண்டாம்கட்ட தலைவா்களை ஊக்குவித்து, அடுத்தக் கட்டத்துக்கு கொண்டுவர வேண்டும் என்பதே கட்சியின் நோக்கம் என்றாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...