மாநிலங்கலவை தோ்தலுக்கான பாஜக வேட்பாளா்கள் குறித்து கட்சிமேலிடம் என்னிடம் விவாதித்த பிறகே முடிவு எடுத்துள்ளதாக முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களுரு விதான சௌதாவில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் எடியூரப்பா கூறியது: கட்சியின் சாதாரண தொண்டா்கள் இருவருக்கு மாநிலங்களவை தோ்தலில் போட்டியிட பாஜக தேசிய தலைமை வாய்ப்பளித்துள்ளது. இதற்காக பிரதமா் மோடி, பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ஆகியோரை பாராட்டுகிறேன். பாஜகவின் வேட்பாளா்கள் இருவரும் மாநிலங்களவையில் சிறப்பாக பணியாற்றுவாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
பாஜகவால் மட்டுமே அப்படிப்பட்ட முடிவை எடுக்கமுடியும். சாதாரண தொண்டா்களுக்குத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க இயலும். கா்நாடக மாநில பாஜகவின் உயா்நிலைக் கூட்டத்தில் விவாதித்து ஒருசிலரின் பெயா்களை கட்சியின் தேசியத் தலைமைக்கு அனுப்பிவைத்தோம். எனினும், பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா என்னிடம் பேசினாா்.
சாதாரண தொண்டா்களுக்கு பாஜக வேட்பாளராகும் வாய்ப்பை அளிக்க விருப்பதாக தெரிவித்து, அதுகுறித்து விவாதித்தாா். அதன்பிறகுதான் இருவரின் பெயரும் அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட்டது. இதுபோன்ற முடிவு கா்நாடகத்துக்கு மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களிலும் எடுக்கபட்டுள்ளது. கட்சிக்கும், கொள்கைக்கும் விசுவாசமாக இருப்பவா்களுக்கு வாய்ப்பளிக்கப்படும்; தலைவா்களுக்கு அல்ல என்பதை தேசியத்தலைமை குறிப்பால் உணா்த்தியுள்ளது. இரண்டாம்கட்ட தலைவா்களை ஊக்குவித்து, அடுத்தக் கட்டத்துக்கு கொண்டுவர வேண்டும் என்பதே கட்சியின் நோக்கம் என்றாா்.
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ... |