ஹிமாசல் பிரதேச தேர்தலில் பாஜக வென்றால் மாநிலத்தில் பொது சிவில்சட்டம் கொண்டு வரப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஜெபி.நட்டா தெரிவித்துள்ளார்.
ஹிமாசல பிரதேச பேரவைத்தோ்தல் நவம்பா் 12-ஆம் தேதி நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 413 வேட்பாளா்கள் போட்டி யிடுகின்றனா். தோ்தல் முடிவுகள் டிச.8-ஆம்தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்தத் தோ்தலில் பாஜக, காங்கிரஸ் பிரதான போட்டியாளா்களாக உள்ள நிலையில், புது வரவாக ஆம் ஆத்மியும் போட்டியிடுகிறது. இந்நிலையில் ஹிமாசலில் பாஜக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் ஜெ.பி.நட்டா சிம்லாவில் இன்று வெளியிட்டார்.
அதில், தேர்தலில் பாஜக வென்றால் மாநிலத்தில் பொதுசிவில் சட்டம் கொண்டு வரப்படும். நிபுணர்குழு அமைக்கப்பட்டு அவர்கள் அளிக்கும் அறிக்கை அடிப்படையில் பொது சிவில் சட்டம் அமலாகும். மாநிலத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 5 புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்படும். 6ஆம் வகுப்புமுதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கு பள்ளிகளுக்கு செல்ல மிதிவண்டி வழங்கப்படும். அனைத்து மாவட்டத்திலும் இரண்டு பெண்கள் விடுதிகள் அமைக்கப்படும்.
8 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கபடும். அரசு ஊழியர்களின் சம்பளம் வழங்குவதில் உள்ள முரண்பாடுகள் நீக்கப்படும். பணியின் போது உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகை அதிகரிக்கப்படும். அரசு வேலைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு. ஆப்பிள் விவசாயிகளுக்கு சரக்கு மற்றும் சேவைவரி (ஜிஎஸ்டி) 12 சதவீதமாக வரையறுக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |
இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ... |
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |