ஏகாதசி விரதம் உருவான கதை

திரேதா யுகத்தில் முரன் எனும் ஒரு கொடிய அரக்கன் வாழ்ந்தான். அவன் தவத்தில் இருக்கும் முனிவர்களையும் தேவர்களையும், துன்புறுத்தினான் கொடுமைகள் செய்தான்.

அவனது கொடுமைகளை தாங்கமுடியாத முனிவர்களும் , தேவர்களும் பெருமாளிடம் சென்று அரக்கன் முரனை அளிக்க

வேண்டும் என்று முறையிட்டனர். திருமாலும் அரக்கன் முரனை அழிக்க முடிவு செய்தார் சக்கராயுதத்துடன் முரனை அழிக்க போருக்கு புறப்பாட்டார்.

திருமாலுக்கும் முரனுக்கும், கடுமையாக போர் நடைபெற்றது . விஷ்ணுவின் சக்கராயுதத்திற்கு முன்னாள் அரக்கனால் நிற்க முடிய வில்லை .இருப்பினும் அவன் பல மாய_வடிவங்களில் போர்புரிந்து வந்தான். தினமும் காலை சூரிய உதயத்திலிருந்து மாலை சூரிய அஸ்தமனம் வரை போர்_நடக்கும்.

தினமும் சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு போர் முடிந்து திருமால் வத்திரிகாசிரமத்தில் இருக்கும் ஒரு குகைக்குசென்று இளைப்பாறுவார். காலை சூரியன் உதித்ததும் , அரக்கனுடன் போர்புரிய போர்களத்திற்க்கு செல்வார்.

ஒருநாள் ஆசிரமத்தில் திருமால் படுத்திருந்தபோது அங்குவந்த முரன், போர்விதிக்கு முரணாக அவரை திடீஇர என்று தாக்க தொடங்கினான். அப்போது பெருமாளின் உடலிலிருந்து ஒரு_மகத்தான சக்தி பெண் வடிவில் எழுந்தது . படைகலங்களுடன் விசுவ ரூபத்துடன் தோற்றமளித்த அந்தபெண் அரக்கனை அழித்தாள்.

இதனால் மனம் மகிழ்ந்த திருமால் . தமது எதிரில்_நின்ற சக்தியைநோக்கி, சக்தியே அசுரனை அழித்த_உனக்கு ஏகாதசி என திருநாமத்தை சூட்டுகிறேன். அரக்கனை அழித்த மார்கழி மாதத்தில் உன்னை விரதமிருந்து வழிபடு வோருக்கு யாம் வைகுண்டபதவியை தந்து ஆட்கொள்வோம் என கூறினார். திருமால் கொடுத்தவரமே ஏகாதசியின் மகிமைக்கு காரணமாகும்

சக்தி வெளிவந்து அரக்கனை வென்றது மார்கழி மாதத்தின் பதினோராவது நாளாக இருந்ததால், திருமாலின்_சக்திக்கே ஏகாதசி என பெயர் ஏற்ப்பட்டது.முனிவர்களும் , தேவர்களும் ஏகாதசி அன்று விரதமிருந்து இழந்த தங்களது சக்தியை மீண்டும்பெற்றனர்.

ஏகாதசி விரதம், உருவான கதை,ஏகாதசி என சொன்னாலே பாவம் தீரும், திரேதா யுகத்தில், முரன், கொடிய அரக்கன், ஏகாதசியின் வரலாறு ஏகாதசி விரதம்

One response to “ஏகாதசி விரதம் உருவான கதை”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...