பெங்களூரு – மைசூரு ரயில்பாதையில் ரூ.40 கோடி செலவில் 130 கி.மீ தூரத்திற்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளபட்டன.இப்பணி சமீபத்தில் முடிவடைந்தது.
இதையடுத்து இப்பாதையில் ரயில்பயணம் சொகுசாக உள்ளதா என்பதை உறுதிசெய்வதற்காக ரயில்வே அதிகாரிகள் ஒரு எளிமையான சோதனைமுறையை கையாண்டனர்.
அதாவது ஒருகண்ணாடி டம்ளரில் ததும்பும் அளவுக்கு தண்ணீர் நிரப்பி ஒரு ஓடும்ரயிலில் ஒரு மேஜையின் மேல் வைக்கப்பட்டது. ரயில் மொத்த தூரத்தையும் அதிவேகமாக கடந்து பயணித்தது. ஆனால் அந்தடம்ளரில் இருந்து ஒருதுளி தண்ணீர் கூட சிதறவில்லை.
மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இந்தவீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பெருமிதம் தெரிவித்துள்ளார். பெங்களூரு மற்றும் மைசூரு இடையே ரயில்பாதையில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணிகளின் முடிவுகளை பாருங்கள் என பதிவிட்டுள்ளார்.
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ... |
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |