பீஹார் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி

பீஹார் சட்டசபை தேர்தலில், இன்று (நவ.,10) காலை 8 மணிக்கு ஓட்டுஎண்ணிக்கை துவங்கியது. இதில் பாஜக ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 128 தொகுதிகளிலும் , லாலு மகன்கட்சி கூட்டணியினர் 100 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளனர்.

பீஹாரில், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ளது. மாநிலத்தின், 243 சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டுகள், இன்று எண்ணப்படுகின்றன.

இந்த தேர்தலில், ஆளும், தே.ஜ., கூட்டணியில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதாதளம், பா.ஜ., மற்றும் சிறுகட்சிகள் இடம் பெற்று உள்ளன. இதில், ஐக்கிய ஜனதாதளம், 115 தொகுதிகளிலும்; பா.ஜ., 110 தொகுதிகளிலும் போட்டி யிட்டன.

எதிர்க்கட்சிகளின் கூட்டணியான, மகா கூட்டணியில், முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையில், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெற்று உள்ளன. சிராக் பஸ்வான் தலைமையிலான, லோக் ஜனசக்தி கட்சி தனித்து போட்டியிட்டன.

இதில் ஐக்கியஜனதா தளம் பா.ஜ., இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பா.ஜ., 63 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 57 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

மெகாகூட்டணி 109 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ராஷ்டீரிய ஜனதாதளம் 68 இடங்களிலும், காங்கிரஸ் 24 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. சிராக் பஸ்வானின் லோக்ஜனசக்தி 3 இடங்களில் உள்ளது.

கடந்த தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் இணைந்து, இந்த கூட்டணியை உருவாக்கின. பா.ஜ., கூட்டணியில் வெற்றி பெற்று, நிதிஷ் குமார் முதல்வரானார் என்பது குறிப்பிட தக்கது. .

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...